Cinema

ஷூட்டிங்ல செல்வராகவன் எப்படி தெரியுமா?? பரபரப்பு தகவலை கூறிய முன்னணி காமெடி நடிகர்!..

Selvaraghavan
Selvaraghavan

தமிழ் திரை உலகில் ஒரு மாறுபட்ட மற்றும் இதுவரை யாரும் எடுத்திராத வகையில் பல திரைப்படங்களை இயக்கி தனக்கென்று ஒரு பாதையை வகுத்தது இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜாவின் மூத்த மகன். முதன்முதலாக இவர் இயக்கி அவரது சகோதரர் தனுஷ் நடித்து வெளியான படம் துள்ளுவதோ இளமை! இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியைக் கண்டு நல்ல வசூலையும் பெற்றது. ஆனால் ஒருவேளை இந்த படம் வெற்றி அடையாமல் தோல்வியை தழுந்திருந்தால் தற்போது செல்வராகவன் என்ற ஒரு இயக்குனரையும் தனுஷ் என்ற ஒரு நடிகரையும் தற்போது தமிழ் சினிமா பார்த்திருக்காது! ஏனென்றால் துள்ளுவதோ இளமை திரைப்படத்தை செல்வராகவன் எடுப்பதற்கு முன்னால் கஸ்தூரிராஜா பெரும் நஷ்டத்தையும் சமாளிக்க முடியாத வகையில் கடனையும் கண்டிருந்தார்.


அதனால் தன்னிடம் இருந்த சில சொத்துக்களை விற்று நஷ்டத்தை பூர்த்தி செய்துவிட்டு கடனையும் அடைத்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே செல்லலாம் என்ற ஒரு திட்டத்தில் இருந்த பொழுது தான் அவரது மூத்த மகனான செல்வராகவன் தங்களிடம் இருக்கும் பணத்தை நான் எடுக்கும் படத்தில் செலவலியுங்கள் என்று கூற அதற்கு நடிகராக யாரும் நடிக்க முன்வராத நிலையில் தனது சகோதரர் தனுசையே இந்த படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார். மேலும் இந்த படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று கொடுத்தது அதன் காரணமாகவே தனது தந்தை கொண்டு இருந்த கடனையும் நஷ்டத்தையும் ஈடு செய்தார்கள் கஸ்தூரிராஜாவின் இரு புதல்வர்கள்! 

அதற்குப் பிறகும் தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியில் பல படங்கள் வெளியானது காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கமென்ன போன்ற படங்கள் இன்றளவும் இருபது கூட்டணியில் மக்களால் ரசிக்கப்பட்டு பார்க்கப்படும் படங்களாகும். அதோடு செல்வராகவன் இயக்கிய செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் அன்றைய 90ஸ் கிட்ஸில் இருந்து இன்றைய 2k கிட்ஸ் வரைக்கும் முக்கிய காதல் படமாகவும் உள்ளது. ஆனால் செல்வராகவன் தனது கனவு படமாக உருவாக்கிய இரண்டாம் உலகம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெறாமல் படுதோல்வியை சந்தித்தது அதை தொடர்ந்து என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் செல்வராகவனுக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை! அதோடு தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியில் மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு வெளியான நானே வருவேன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது செல்வராகவன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார் அதோடு சாணி காகிதம் பகாசுரன், பர்கானா, மார்க் ஆண்டனி என்ற படங்களில் தற்போது நடித்தார். 

அதுமட்டுமின்றி  தனது அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நிலை மாறி ஆனால் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். அதைக் குறித்து தனுஷ் கூட சமீபத்தில் நான் செல்வராகவனை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை இயக்குனர் சார் என்று கூற வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி சார் என்று செல்வராகவன் கூறியதும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் பற்றி பிரபல காமெடி நடிகராக உள்ள பவா லட்சுமணன் ஒரு பரபரப்பான தகவலை கூறி உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள பவாலட்சுமணன், செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தால் எல்லாரும் பயந்து நடுங்குவார்கள் அனைவரும் போய் ஒளிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, மேலும் இயக்குனர் பாலா தான் மிகவும் டெரரான இயக்குனர் என்று பார்த்தால் செல்வராகவன் கூட அப்படித்தானா என்ற வகையில் விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்பட்டு வருகிறது.