24 special

ஆர்.எஸ் பாரதியை முடிச்சுவிட்ட நீதிமன்றம்... ஏற இறங்க பார்த்த நீதிபதி.. விசாரணைக்கு உங்க மனு தகுதியற்றது போய்ட்டு வாங்க

R.S.BHARATHI ,COURT
R.S.BHARATHI ,COURT

பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.  2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கம் செலுத்தும் எனக் கருதப்படும் நடவடிக்கை இது.தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்னேற்பாடாக வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான பணியே. 


அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பல்லாயிரம் வங்கதேசத்தினர், முறைகேடாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று இங்கு நடந்த தேர்தல்களில் பல முறை வாக்களித்துள்ளனர் என்ற தகவல், ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. இந்திய தேர்தலில் ஓட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் , ஊடுருவல்காரர்கள் பிடிபட்டாலும் அவர்களை சரியாக காவல்துறையினர் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் வங்க தேசத்தினரும் தமிழகத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையினைப் பெற்று பல தேர்தல்களில் ஓட்டுப் போட்டும் வந்துள்ளனர் இது திருப்பூரில் பிடிபட்ட நபர்கள் வாயிலாகவும் அம்பலமாகியுள்ளது.

மேலும் நெல்லையில் 68,745 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை பதிவு, இறப்பு போன்றவைகளில் அடங்கும் வாக்காளர்கள் 8.60% சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரட்டை வாக்காளர் பதிவுகள், இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தமிழக அளவில் எடுத்துக்கொண்டால் எவ்வளவு இறந்தவர்கள் பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பார்களோ என்பது தலை சுற்ற வைக்கிறது. 

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ரிட் மனு முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று, எஸ்.ஐ.ஆர் விவகாத்தில் ஆர்.எஸ்.பாரதியின் ரிட் மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.