
தி.மு.க இளைஞரணி நிர்வாகிமீது, கல்லூரி மாணவி ஒருவர் டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார், அரக்கோணத்தையே அதிரவைத்திருக்கிறது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்த தெய்வா என்கிற தெய்வச்செயல் என்பவர்தான் புகாருக்குள்ளான அந்த நபர். தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகித்தவர் தெய்வா.
இந்த நிலையில், அரக்கோணத்துக்கு அருகிலுள்ள பருத்திப்புத்தூர் கிராமம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த பிரீத்தி என்கிற கல்லூரி மாணவி, கடந்த வாரம் ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் மனுக்களை அளித்திருக்கிறார். அதில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்துச் சித்ரவதை, கொலை மிரட்டல் விடுத்தல் கட்சி பிரமுகர்களுக்கு இரையாக்குவது எனதிமுக நிர்வாகி தெய்வா மீது அடுக்கடுக்காகப் புகார்களைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையில், தனது புகார் மீது போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற ப்ரீத்தியின் குற்றச்சாட்டு சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தெய்வாவை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி அறிவித்தார். இதற்கிடையில், தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரக்கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி நிர்வாகி மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் அரசியல் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர், உடனடியாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல், சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தல், எந்த அரசியல் தலையீட்டையும் தடுத்து பிஎன்எஸ் சட்ட விதிகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மூன்று நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை நகலுடன், விரிவான மேல்நடவடிக்கை குறித்த விவரத்தையும் அனுப்புமாறு டிஜிபியை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப் போல் தான் அண்ணா பல்கலை கழக மாணவி விவாகரத்திலும் திமுகவின் அனுதாபியான ஞானசேகரன் சிக்கினான் அந்த வழக்கிலும் காவல்துறை முறையாக நடந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது புகார் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையே வெளியானது.அதுமட்டுமில்லாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வீடுகளுக்கு சென்றுள்ளார்.
தற்போது அரக்கோணம் மாணவியின் வழக்கும் இதேபோல் தான் உள்ளது புகார் கொடுத்த பெண்ணின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களை திமுகவினர் பரப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யார் அந்த சார் அந்த வரிசையில் தற்போது அரக்கோணத்தில் சிக்கிய திமுக முன்னாள் இளைஞர் அணி நிர்வாகி சார் யார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் இவரை மேலிடம் காத்துவருகிறதாம் ஒரு அமைச்சருடன் தொடர்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.