24 special

இஸ்ரேல் ரேடாரில் பாகிஸ்தான்! நெதன்யாகு - மோடி ரகசிய திட்டம்! வெளியான பரபரப்பு தகவல்கள்!

PMMODI,BENJAMINNETANYAHU
PMMODI,BENJAMINNETANYAHU

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நட்புறவு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு உள்ள உறவுகளை  வலுப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருநாட்டு அதிகாரிகளும் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறையின் தலைமை இயக்குநர் ஈடன் பார் டால், இந்தியாவுடனான உறவு மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில்:இந்தியா விரைவில் மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும். இயற்கை வளங்களை விட மனித வளத்தின் மீது இஸ்ரேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. திறமையான மனித வளம் இந்தியாவில் ஏராளமாக உள்ளது என கூறினார். 


இந்த நிலையில் தான் ஒரு முக்கியவிஷயம்ஒன்று வெளியாகை பரபரப்பை கிளப்பியுள்ளது. இஸ்ரேலின் அடுத்த குறி பாகிஸ்தானாக இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி அசீம் இப்திகார் பேசினார். அவர் இஸ்ரேலை கண்டித்து கருத்துகளை முன்வைத்தார்.

அசீம் இப்திகார் பேசும்போது, ‛‛கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சட்டவிரோதமானது. அதோடு இது அடாவடியான தாக்குதல். இஸ்ரேல் தொடர்ந்து அண்டை நாடுகளை குறிவைத்து வருகிறது.சர்வதேச சட்டங்களை மீறி இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இப்போது கத்தாரையும் அட்டாக் செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

இதற்கு இஸ்ரேல் பிரதிநிதி டேனி டானன் பதிலடி கொடுத்தார்., ‛‛பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார். அங்கு வைத்து தான் அவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து தீர்த்து கட்டியது. ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஏன் அடைக்கலம் கொடுத்தது.

பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு தான் எப்போதும் பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது. எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அல்லது ஆதரவு கொடுக்க கூடாது என்று ஐநா சபை கூறி உள்ளது. இது இன்றும் பொருந்தும். ஆனால் அதுபற்றி எல்லாம் பாகிஸ்தான் கவலைப்படுவது இல்லை. கண்டுக்கொள்வது இல்லை. இஸ்ரேல் பற்றி தவறாக பேசி வருகிறது'' என்றார்.

இஸ்ரேலின் இந்த பதிலடியை கேட்டவுடன் பாகிஸ்தான் பிரதிநிதி நொந்துபோனார். அவரது முகம் வாடியது. இதற்கிடையே தான் இஸ்ரேல் - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேல் தலைவர்களை கோபப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது இஸ்ரேல் ஒரே நேரத்தில் காசா போர், லெபனான் எதிர்ப்பு, ஈரான் எதிர்ப்பு, கத்தார் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி  வருகிறது. 

இதனால் பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் மோதலால் இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட்டில் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் இருக்கிறதாம்,  இஸ்ரேல் - பாகிஸ்தான் இடையே நல்ல உறவு என்பது இல்லை. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இஸ்ரேலை தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.

மேலும் தங்கள் நாட்டு மக்கள் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் பாஸ்டோர்ட்டுகளில் கூட இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் இது செல்லுப்படியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருநாடுகள் இடையே நல்லுறவு என்பது இல்லாத சூழலில் இந்த சம்பவம் பேசும்பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் இஸ்ரேல் இந்தியா உறவு இன்னமும் பலப்படுத்தி வருகிறதாம்.