24 special

தயாரானது சுதர்சன சக்கரம்! அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா... 10 நாட்களில் டிரம்புக்கு பெரிய ஷாக் கொடுத்த மோடி..

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலக அளவில் இந்தியா அமெரிக்க உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மேலும் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.குறிப்பாக இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்கவை  அலரச்செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருவது ஆயுதங்கள் விற்பனை,அதில் கை வைத்து விட்டது இந்தியாவும் ரஸ்யாவும் இது தான் அமெரிக்காவால் தாங்கிகொள்ள முடியாமல் இந்தியா மீது வரியை விதித்து வருகிறது. 


இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி   நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இஸ்​ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு கவசத்தை நிறு​வியது. எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​களை அயர்ன் டோமில் இருந்து புறப்​படும் ஏவு​கணை​கள் நடு​வானில் அழித்​து​விடும். இதை அடிப்​படை​யாக வைத்து இந்​தி​யா​வின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர வான் பாது​காப்பு கவசம் உரு​வாக்​கப்பட உள்​ளது. என் அறிவித்தார் . 

இதற்கிடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தி உள்ளது.  

 ஆபரேஷன் சிந்​தூரின்​போது ஆகாஷ்தீர் என்ற வான் பாது​காப்பு கவசத்தை பயன்​படுத்​தினோம். தற்​போது ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசத்​தில் எஸ்​400 ஏவு​கணை​கள், பிரள​யம், பிருத்​வி, ஏஏடி, ஆகாஷ், எஸ்​125 பெசோ​ரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்​எஸ்​ஏஎம், எஸ்​200 ஆகிய ஏவு​கணை​கள் இணைக்​கப்​பட்டு உள்​ளன. ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கட்​டமைப்​பு​கள் பொருத்​தப்​பட்ட 107 வாக​னங்​கள் எல்​லைப் பகு​தி​களில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. இதோடு ரேடார்​கள், சென்​சார்​கள், உளவு செயற்​கைக்​கோள்​கள் இணைக்​கப்​பட்டு இருக்​கிறது.

இந்​திய வான் பரப்​பில் எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் நுழை​யும்​போது ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசத்​தில் பதி​வாகும். எதிரி​யின் ஆயுதம் என்ன?, அதற்கு எந்த வகை​யான ஏவு​கணை​களை பயன்​படுத்​தலாம் என்​பதை ஆகாஷ்தீர் சில நொடிகளில் கணக்​கிட்டு தகவல் அளிக்​கும். இதன்​படி எதிரி​களின் வான்​வழி தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​படும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி கூறி 10 நாட்களிலே  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் சோதனை ஓட்டத்தை "வெற்றிகரமாக" இந்தியா நடத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு என்பது ஒரு உள்நாட்டு தயாரிப்பு. மிக குறுகிய தூரத்துக்குள் அதிவிரைவாகச் சென்று எதிரியின் ஏவுகணைகள் மற்றும் உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்ல பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும்”கிட்டதட்ட இஸரேலின் அயன்டோர்ம், டேவிட் ஸ்லிங் போல மிக வலுவான அமைப்பு இது. 

இதே போல், 'ககன்யான்' திட்டத்தில், வேக குறைப்பு அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனையையும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு மிக மிக அவசியம். போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இடைமறித்து தாக்க இந்த அமைப்பு உதவுகிறது.  குறிப்பாக ஆயுதங்கள் தயாரிப்பை தீவிரப்படுத்தி விற்பதற்கு அதுவும் டாலர் இல்லாமலும் சொந்த கரன்சியை விற்பனையை தொடங்க உள்ளது இந்தியா. இது அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியுள்ளது.