24 special

சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப்.... இந்தியாவின் அதிரடியான பதிலடி..... அமெரிக்காவுக்கு 1 லட்சம் கோடி இழப்பு!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலகம் முழுவதும் பேசப்பட்டுவருவது அமெரிக்காவின்  வர்த்தக வரி விதிப்பு தான்   இது தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். இந்தியாவுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை டிரம்ப் 


அமெரிக்க அதிப​ராக, 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு இந்​தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார்.இதற்கு பதிலடி​யாக பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என அறி​வித்த அவர், கடந்த ஏப்​ரல் 2-ம் தேதி அதற்​கான பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். இதில் இந்​திய பொருட்​களுக்கு 26% வரி விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.எனினும், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருந்தது. இதையடுத்​து, இடைக்​கால ஒப்​பந்​தம் ஏற்​படுத்​திக் கொள்ள ஏது​வாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​தார் ட்ரம்ப். இதையடுத்​து, அமெரிக்கா​வுடன் பல நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன.பிரிட்​டன், வியட்​நாம் ஆகிய 2 நாடு​களு​டன் மட்​டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்​பாக ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்ளது.  

அதே​நேரம், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​களு​டன் ஒப்​பந்​தம் ஏற்​ப​டாத நிலை​யில் 12 நாடு​கள் உ​ட​னான வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறி​யுள்​ளார். இந்​தி​யா - அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. மத்​திய அரசின் சிறப்பு செய​லர் மற்​றும் வர்த்தக துறை செய​லர் ராஜேஷ் அகர்​வால் பேச்​சு​வார்த்​தை​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். அகர்​வால் தலை​மையி​லான இந்​திய குழு கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அமெரிக்​கா​வில் முகாமிட்டு இருந்​தது. பேச்​சு​வார்த்​தை​யில் இன்​னும் உடன்​பாடு எட்​டப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது. இதற்​காக அமெரிக்கா சென்​றிருந்த இந்​திய அதி​காரி​கள் குழு கடந்த 4-ம் தேதி நாடு திரும்​பியது.

ஜவுளி, தோல் மற்​றும் காலணி​கள் சந்​தையை அணுக வாய்ப்பு ​அளிக்க வேண்​டும் என இந்​தியா கேட்​கிறது. அதே​நேரம், அமெரிக்​காவோ, வேளாண்மை மற்​றும் பால்​பொருள் சந்​தை​யில் தாராளம் காட்​டு​மாறு கோரு​வ​தாக கூறப்​படு​கிறது. வேளாண் விளைபொருட்​கள் விவ​காரத்​தில், குறிப்​பாக மரபணு மாற்​றப்​பட்ட பயிர்​களை அனு​ம​திப்​ப​தில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்​த துறை தொடர்​பானவிவ​காரத்​தில் இந்​தியா எப்​போதும் உறு​தி​யான நிலைப்​பாட்டை எடுத்​திருப்​ப​தாக கூறப்​படு​கிறது.இதற்கிடையே  இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்​நிலை​யில், மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறியதாவது: அமெரிக்கா​ உட​னான வர்த்தக வரி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட இந்​தியா அவசரப்​பட​வில்​லை. குறிப்​பாக இந்​தி​யா​வின் பொருளா​தார நலன்களை பணயம் வைக்கும் ஒப்​பந்​தத்​தில் இந்​தியா கையெழுத்​தி​டாது. இந்த விவ​காரத்​தில் காலக்​கெடுவை காரணம் காட்டி இந்​தி​யா​வுக்கு அழுத்​தம் கொடுக்க முடி​யாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டாலும் சில விஷ​யங்​களில் இந்​தியா சர்​வ​தேச மன்​றங்​களை நாட தயங்​க​வில்​லை. வாகன உதிரி​பாகங்​கள் மற்​றும் அலுமினி​யம் மீதான அமெரிக்​கா​வின் வரி​களுக்கு எதி​ராக உலக வர்த்தக அமைப்​பில் இந்தியா முறையிட்​டது. எனவே, இந்​தியா மீது அமெரிக்கா தன்​னிச்​சை​யாக வரி விதித்​தால், அந்த நாடு வி​திக்​கும் அதே அளவுக்​கு பரஸ்​பர வரி வி​திக்​க​வும்​ இந்​தி​யா திட்​டமிட்​டுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது. இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் வாங்குவது குறையும் இதனால் அமெரிக்காவுக்கு 65 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.