
திமுக கூட்டணி உடைய வாய்ப்புகள் அதிகமாகி கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன.
"கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறினார். இந்த நிலையில பாமக நிறுவனர் ராமதாஸை செல்வப்பெருந்தகை சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
மேலும் கடந்த 24 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் 2021இல் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முத்துரத்தினம் தன்னை தாய் கழகத்தில் இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கரைபோட்ட துண்டு அணிவித்து வருக… மகிழ்ச்சி…. என்று வரவேற்றுள்ளார்.
முத்துரத்தினம் திமுகவில் சேர்க்கப்பட்டது மதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மதிமுக ஆடிட்டர் அர்ஜூணன் திமுகவைக் கடுமையாக தாக்கிபேசியது, 12 தொகுதிகளை கேட்டு பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை திமுக இரசிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிமுக திமுக கூட்டணியில் இணைந்த கடந்த 11 ஆண்டு காலம் 50க்கும் மேற்பட்ட மதிமுக முன்னணியினர் திமுகவில் இணைய முயன்றபோது இணைத்துக்கொள்ளாமல் கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்த திமுக தலைமை, மதிமுக பொதுக்குழுவுக்குப் பின் பல்லடம் முத்துரத்தினத்தைத் திமுகவில் சேர்த்துக்கொண்டது என்பதன் மூலம் மதிமுகவுக்கு கூட்டணியில் இருக்க விரும்பினால் கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் கூட்டணியில் விலகிக் கொள்ளலாம் என்ற தகவலைத்தான் தெரிவித்துள்ளது என்பதே உண்மையாகும்.
இந்த நிலையில் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார் இந்த சந்திப்பு தற்போது திமுக கூட்டணிக்குள் அடுத்த சலசப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை மதிமுகவை போன்று காங்கிரசை உடைக்கவும் திமுக ஸ்கெட்ச் போட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனேவே காங்கிரஸ் கோஷ்டி சண்டை ஊரறிந்தது, பல பேருக்கு வாரிய பதவிகள் முடிவுக்கு வருகிறது மத்தியில் பாஜக இருப்பதால் வாரிய பதவி காங்கிரசுக்கு செல்ல வாய்ப்புகள் இல்லை இதனால் எப்போதும் பதவியில் திடீரென பதவி பிடுங்கப்பட்டால் என்ன செய்வது என்பதால் திமுக தலைமையிடம் தமிழக அரசால் வழங்கப்படும் வாரிய பதவிகளுக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார்கள்.
வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டுக்கொண்டிருக்கும் காங்கிரசை அடக்க ஒருவாய்ப்பாக பயன்டுத்தி உள்ளது திமுக. திமுகவில் இணைந்தால் வாரிய பதவிகள் என ஆசை காட்டியுள்ளது. இதற்கும் காங்கிரசின் சில தலைகள் ஒப்புகொண்டுள்ளார்கள் இந்த இதனை தெரிந்து கொண்ட காங்கிரஸ் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அங்க தொட்டு இங்க தொட்டு இப்போ எங்களையும் விட்டுவைக்கலையா என திமுக மீது பாய்வதை தொண்டங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தான் காங்கிரஸ் மாநில தலைவர் பாமக நிறுவனரை சந்தித்துள்ளார்.
மேலும் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நட்புடன் தான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மீண்டும் காங்கிரஸ் விஜய் பாமக கம்யூனிஸ்ட்கள் ஒன்றாக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சீமான் மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்தும் ஆலோசிக்கவில்லை. தமிழகத்திற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார் என கூறினாலும் இது திமுகவுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. ஒருவேளை பாமக திமுக கூட்டணிக்கு சென்றால் விசிக நிலை அதோகதி தான்..