24 special

''சற்றுமுன் களமிறங்கிய அஜித் தோவல், புது operation, மோடி அமித்ஷா அதிரடி முடிவு'' அதிரடி மாற்றம் நினைத்த நேரம் வந்தது!

AJITDOVAL,PMMODI
AJITDOVAL,PMMODI

திரைப்படங்களில் எல்லோரையும் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபத்திரத்தையே மிஞ்சும் ஒரு நிஜ கதாநாயகராக இந்தியாவின் அஜித் தோவல் இருந்துவருகிறார். யார் இவர்?  அஜித் தோவல் உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்து வருகிறார். 1968-ல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான இவர் கீர்த்தி சக்ரா என்ற வீரதீர செயலுக்கான நாட்டின் இரண்டாவது உயரிய விருதைப் பெற்றவர் ஆவார். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இவரே நாட்டின் மிக உயரிய அதிகாரியாக அறியப்படுகிறார்.


மத்தியில் 2014-ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். உளவுப் பிரிவு, ராஜதந்திர நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் பெற்ற தோவல், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற, 1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இந்தியாவின் உளவு அமைப்புகளான ஐபி மற்றும் ‘ரா’வில் வெற்றிகரமாகப் பணியாற்றியவர். பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடங்கி, காந்தகார் விமானக்கடத்தல், புல்வாமா தாக்குதல் என நாடு பல நெருக்கடியான நேரத்தில் அஜித் தோவல் திறம்படப் பணியாற்றி வெற்றியைத் தேடித் தந்தவர் 

2015-ல் மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்திய நாகா தீவிரவாதிகளை அழிப்பதற்காக மியான்மர் நாட்டு எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை அழித்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர். 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நடத்தபட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கின் நாயகனும் அஜித் தோவல்தான்.

இவர், சமீபத்தில் மும்பை சென்று, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்தார். 'அஜித் தோவலை வரவேற்கிறேன்' என தன், 'எக்ஸ்' தளத்தில் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்தார் பட்னவிஸ். இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏனென்றால் உலக அரசியல் பார்த்துவிட்ட  அஜித் தோவல் தற்போது உள்ளூர் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.  குறிப்பாக  பாஜகவில் அடுத்த பிரதமர் யார் என்ற  கேள்வி எழுந்த நிலையில் அஜித் தோவல் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ,மேலும் இவரின் வயது காரணமாக தான் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.  பிரதமர் மோடியின் முடிவு தான் இது என்கிறார்கள் பாஜக வட்டாரங்கள்.. எனவே, இவருக்கு கவர்னர் பதவி அளிக்க மோடி முடிவு செய்துள்ளார்' என, டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.  'மஹாராஷ்டிர கவர்னர் பதவி இவருக்கு கிடைக்கும்; அதனால்தான், முதல்வரை சந்தித்து உள்ளார்' என்கின்றனர்.

'அப்படியானால் தற்போது மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, சி.பி.ராதாகிருஷ்ணன் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது' என, சொல்லப்படுகிறது.'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு முன்பாக, கவர்னர்கள் மாற்றம், புதிய கவர்னர்கள் நியமனம் நடக்கலாம்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பாஜக வில் மோடிக்கு அடுத்தது யார் என்ற விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. அந்த ரேஸில் இருப்பவர் தேவேந்திர பாட்னாவில் தான் பிரதமர் ரேஸில் முன்னணியில் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கையான ஆளாகவும் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்  குறிப்பாடத்தக்கது. இதனிடையே அஜித் தோவல் மகாராஷ்டிரா சென்றுள்ளது  பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் 2029 வரை பிரதமராக மோடி தான் தொடர்வார் என்பது அடித்து கூறலாம் அதன் பின்னர்  மோடி உட்சபட்ச அதிகாரம் பெற்ற பதவியில் இருக்க போகிறார். அதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் தான் அடுத்த பிரதமருக்கு ட்ரைனிங்கை தற்போதே ஆரம்பித்துவிட்டார்கள் பாஜக.