24 special

திமுக முதலுக்கே உண்டான மோசம்...! டெல்லி பக்கம் சென்ற தூண்! துரைமுருகனை பார்த்து அதிர்ந்த ஸ்டாலின்!

MKSTALIN,DURAIMURUGAN
MKSTALIN,DURAIMURUGAN

திமுகவைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம்தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளரின் ஆதிக்கம் இருக்கும்.உதாரணத்திற்கு விழுப்புரம் பொன்முடி, திருச்சி கேஎன் நேரு, திருவண்ணாமலை எவ வேலு, திண்டுக்கல் ஐ பெரியசாமி என பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது . பல மூத்த முன்னாள் அமைச்சர்களே உதயநிதியை தற்போதைய முதல்வராக ஏற்றுக் கொண்டது போல் தான் நடந்து வந்தார்கள். இந்த பயன்படுத்திக்கொண்ட  உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருக்கமான சில இளம் அமைச்சர்கள், சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டி வருகின்றனர். இது கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 


இந்த நிலையில்  திமுகவின் உயர்மட்டப் பொறுப்புகளில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் அதிகாரம் மிக்கவை. அந்த வகையில் மறைந்த கருணாநிதி  மற்றும் அன்பழகன்  ஆகிய இருவரும் திமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்தனர். முக்கிய முடிவுகள் அனைத்தும் இருவரும் கலந்தாலோசித்தே எடுத்தனர். அதன் பிறகு, பொதுக்குழு, செயற்குழுவில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதே அணுகுமுறை திமுகவில் தொடர்ந்து வந்த நிலையில், முக ஸ்டாலின் திமுகவின் தலைவராக பதவியேற்ற முதல்  மாப்பிளை சொல்வதையும் வடக்கிலிருந்து வந்த பிரசாந்த் கிஷோர் சொல்வதை மட்டுமே செய்து வந்தார். மேலும் பழைய திமுக போல் இல்லாமல் திமுகவின் குடும்பத்தின் கை ஓங்கியது. சீனியர்களைஓரம்கட்ட தொடங்கினார்கள். மேலும் பல சீனியர்கள் அரசியலிலிருந்து ஒதுக்கப்ட்டும் வருகிறார்கள். இதில் முதலில் வெளியேறிது பொன்முடி தற்போது டார்கெட் பொது செயலாளர் துரைமுருகன். துரைமுருகன் மீது சமீபகாலமாக அதிருப்தி அடைந்திருக்கிறது கோபாலபுர குடும்பம்.இதற்கு பல காரணங்களும் சம்பவங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.குறிப்பாக ஸ்வீட் பாக்ஸுகள் கோபாலபுர குடும்பத்துக்கு செல்வதில்லை.  இப்படிப்பட்ட சூழலில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுமாறும், அதற்கான விலகல் கடிதத்தை தலைமைக்கு அனுப்புமாறும் துரைமுருகனுக்கு  தலைமையின் உத்தரவின் பேரில் மாப்பிளை  தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் துரைமுருகனை அதிர்ச்சிடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், புதிய பொதுச் செயலாளராக, திமுகவின் தற்போதைய பொருளாளர் டி.ஆர்.பாலுவும், புதிய பொருளாளராக அமைச்சர் எ.வ.வேலுவும் நியமிக்கஸ்டாலின் தீர்மானித்துள்ளாராம். இந்த அதிரடி மாற்றம் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கவிருக்கிறது. அப்போது துரைமுருகன் பதவிப் பறிக்கப்பட்டு, பொதுச்செயலாளராக டி.ஆர்.பாலுவும், பொருளாளராக ஏ.வ.வேலுவும் பொறுப்பேற்கவிருக்கின்றனர். பொதுச்செயலாளர் பொறுப்பேற்கவிருக்கும் டி.ஆர்.பாலுவும் உடல் ரீதியாக பலகீனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுப்பதில் முட்டுக்கட்டை போட்டதிலிருந்தே, அவர்மீது மேலிடக் குடும்பத்துக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. தவிர, துரைமுருகனை ஏன் துணை முதல்வர் ஆக்கவில்லை? என அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியதை, துரைமுருகன் மறுத்துப் பேசவில்லை. அந்த விஷயத்திலும் மேலிடக் குடும்பத்துக்கு இவர்மீது கசப்புதான் மேலும் மொத்தமாக வட மாவட்டங்களை திமுக இழந்து விடும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தான் பாமகவில் உட்கட்சி பிரச்சனையை தூண்டிவிட்டு வட மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற திமுக பிளான் போட்டுவிட்டது. இதற்கிடையில் மீண்டும் டெல்லி விரைய உள்ளாராம் துரைமுருகன்.டெல்லியில் பல திமுக குறித்த பைல்களை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் கோபாலபுர குடும்ப தரப்பு சற்று அதிர்ச்சியில் உள்ளதாம்.