24 special

காலங்களும் மாற காட்சிகளும் மாறுகின்றனவா? கூட்டணி ஆட்சி... முதல்வர் யார்... அமித்ஷாவின் கணக்கு இதுவா?

AMITSHAH,EDAPADIPALANISAMY
AMITSHAH,EDAPADIPALANISAMY

 தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் பம்பரமாக ஈடுபடத் தொடங்கிவிட்ட அதே நேரத்தில், ‘காலங்களும் மாற காட்சிகளும் மாறுகின்றனவா?’ என்ற கேள்வியை அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.


தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமைபெற்று வருகிறது. திமுகவுக்கு ஏதிரான அரசியலில் தீவிரமாக களமிறங்க உள்ளது.  திமுகவை எதிர்த்து பாஜக ஒருபக்கம் அதிமுக ஒருபக்கம் என தீவிரமாக களமாட தொடங்கிவிட்டது இது ஆளும் தரப்புக்கு மிக பெரும் சவாலாக அமைந்துள்ளது இதனால்  தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு உண்டு செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளது திமுகவும் ஊடகங்களும். தமிழகத்தில் நடக்கும் அராஜகங்களை மக்கள் முன் வைக்காமல் .தினம் தோறும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் செய்திகளும் விவாதங்களும் நடத்தி வருகிறது. ஆர்.எஸ் பாரதி ஊடகங்கள்.பொருந்தாத கூட்டணி என விமர்சிக்கும் ஊடகங்கள் திமுக காங்கிரஸ் கூட்டணி என்ன பொருத்திய கூட்டணியா கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசுவதில்லை. ராஜிவ் காந்தியை கொன்றது யார் மிசா சட்டத்தில் உள்ளே சென்றது யார் இலங்கை தமிழர் விஷயத்தில் நடந்தது என்ன இதையெல்லாம் தாண்டி வெறும் பதவிக்காக குடும்ப நலனுக்காக கூட்டணியில் இருப்பவர்கள் யார் என ஊடகங்கள் விவாதிக்க தயாராக இல்லை. 

 இதற்கிடையே கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியால், அ.தி.மு.க., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது என ஊடகங்கள் கொளுத்தி போட்டது.இதை விவாத பொருளாகவே மாற்றியது. அமித்ஷா அவர்களின் பேட்டிக்கு  உடனடியாக பதிலோ, எதிர்ப்போ தெரிவித்து, கூட்டணியில் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத பழனிசாமி, இப்போதைக்கு அமைதி காக்க முடிவு செய்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் உண்டு  கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். எப்படியாவது அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி உடைத்து விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் திமுகவுக்கு பாஜ அல்லது அதிமுக தலைகள் எதை பேசினாலும் ஊதி பெரிதாக்குவது தான் முதல் அஜெண்டா. மேலும்  தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் அனைத்தையும் தீர்மானிக்கும். என அமித்ஷா தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி என்றும் அவர்  தெளிவாக கூறியுள்ளார். இந்த நிலையில் அமித்ஷாவின் தற்போதைய பேச்சுக்கு அமித் ஷா பேச்சுக்கு பதில், எதிர்ப்பு என எதையாவது அதிமுக பொது செயலாளர் பேசவேண்டும்  என்று தி.மு.க., எதிர்பார்க்கிறது. அதற்கு இடம் தந்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, இப்போதைக்கு அமைதி காப்பதே நல்லது என்ற முடிவை எடுத்துள்ளது அதிமுக 

அதே போல் 'மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கூட்டணி ஆட்சி தொடர்பாக, யாரும் பொது வெளியில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது' என, கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ.க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளேம். அமித்ஷா அவர்களே சென்னை வந்து, அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். அன்று முதல், இந்த கூட்டணியை உடைக்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டு வருகிறது. எனவே, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க, அமித் ஷா தெரிவித்த கருத்து தொடர்பாகவும், கூட்டணி மற்றும் கூட்டணி தலைவர்கள் தொடர்பாகவும், யாரும் எந்தவித கருத்தையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என, கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ.க தலைமை கூறியுள்ளது.