24 special

அப்பா அம்மாவை மதிக்காத எவ்ளோ பெரிய நம்பர் 1 ஹீரோவாக இருந்தாலும் நல்லா இருக்க மாட்டாங்க.. தயாரிப்பாளர் கே.ராஜன் ஆதங்கம் !!

Vijay and k. Rajan
Vijay and k. Rajan

சமீப காலமாக  சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் பேசும் பேச்சு சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் அம்மா அப்பாவை மதிக்காத யாரும் நல்லா இருக்க முடியாது என்று நடிகர் விஜய்யை குறிப்பிட்டு பேசுவதாக இவருடைய பேச்சு அமைந்து உள்ளது. 


அதில், அப்பா அம்மாவை மதிக்காத யாராக இருந்தாலும் சத்தியமாக நல்லா இருக்கவே முடியாது; எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி; இன்றைய இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி.....எந்த அப்பாவும் தன் பிள்ளைகளுக்கு கெடுதல் நினைக்க மாட்டாங்க... கெடுதலும் செய்ய மாட்டாங்க... உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு சின்ன செடி வளரும் போது, அந்த செடிக்கு சுடு தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்? வளரும் செடியின் வேருக்கு சுடு தண்ணீர் ஊற்றினால் அது கருகிப் போகும்.

அதனால எந்த ஒரு அப்பாவும் தன் பிள்ளைக்கு கெடுதல் நினைக்க மாட்டாங்க... ஆனா அது வளர்ந்த பிறகு இன்று வந்த பொண்டாட்டிக்காக தன் தந்தையை தூக்கி எறிவது போன்ற நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கிறது.....அதுவும் தந்தையை நீதிமன்ற வாசலுக்கு செல்ல வைக்கின்றனர்..



"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" தாயையும் தந்தையையும் வணங்கினால் வேறு எந்த ஒரு கடவுளையும் வணங்க வேண்டாம்;  இவ்வுலகில் கடவுளே இல்லை; அம்மா அப்பா தவிர வேறு யாரும் கடவுள் இல்லை; அவ்வளவு ஏன்? கடவுளை வைத்து புத்தி சொல்லப்படுகிறது ஒரு புராணத்தில்....

நாரதர், பார்வதி சிவனிடம் ஒரு மாம்பழம் கொடுக்கிறார். அப்போது விநாயகருக்கும் முருகனுக்கும் எப்படி அந்த ஒரு பழத்தை கொடுப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இவ்வாறான குழப்பம் சினிமாவில் நிறைய பேருக்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.. உலகத்தை யார் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம் என சொல்லப்பட்டது. முருகன் என்ன செய்தார் என்றால் மயில் வாகனத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்தார். ஆனால் விநாயகர் என்ன செய்தார்.. அப்பா அம்மாவை சுற்றி வந்தார்.... ஆக கடவுள் அப்பா அம்மா தான் என்பதை சொல்லக்கூடிய புராணம்  அது என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த சினிமாவில் தயாரிப்பாளர்களை காப்பாற்றுகிற இயக்குனர்களை நான் வரவேற்கிறேன்.... பணம் போடுகிற தயாரிப்பாளர் தான் கடவுள் என குறிப்பிட்டு ஒரு நிகழ்வில் பேசி இருக்கிறார் டைரக்டர் கே ராஜன்