24 special

ஒரு குடு "கொடுக்கலாம்னு" பார்த்தேன் ஓடிட்டாரு.. மிரட்டி எடுத்த மதுரை ஆதினம்..!

Madurai aadhinam
Madurai aadhinam

சாணாக்யா இணைய ஊடகத்தின் மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது, இதில் மதுரை ஆதினம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இன்னும் பிற விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


இதில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதினம் எப்போதும் இல்லாத அளவாக வெளிப்படையாக பேசிவிட்டார் தமிழகத்தில் சர்ச், மசூதி சொத்துக்களை கணக்கு கேட்காத அரசாங்கம் இந்துக்களான எங்களிடம் மட்டும் கணக்கு கேட்கிறது இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என குறிப்பிட்டார்.

அத்துடன் முன்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சரை ஒரு குடு கொடுக்கலாம் என இருந்தேன் என்ன செய்தார்கள் எங்களை கேட்டார் ஏன் காரில் வருகிறீர்கள் என கேட்டார், போப் எதில் வந்து இறங்கினார் சொல்லுங்க, கோவில் நுழைவதற்கு கட்டணம் வாங்கும் அவலம் நடக்கிறது இது எல்லாம் மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் தாமரை மலர வேண்டும்.

அத்துடன் ஒன்றை சொல்லவேண்டும் சிவனை பகைத்தவன் செத்தான் யாரும் விளையாடாதீர்கள் என்று அனைத்தையும் வெளிப்படையாக பேசினார், ஆதினத்தின் இத்தகைய பேச்சு இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது, இதற்கு முன்பு இருந்த மதுரை ஆதினம் சைவத்தை வளர்க்க வேண்டிய இடத்தில் இல்லாமல் மத சார்பின்மை பேசிய நிலையில் தற்போதைய மதுரை ஆதினம் தன் கடமையை செய்வதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மதுரை ஆதினம் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.