24 special

கூட்டணி இல்லனா திமுக டம்மி ...ஒரே போடாக போட்ட கம்யூனிஸ்டு..நேரம் வந்துருச்சு! கூட்டணி உடைஞ்சுருச்சு..கலகத்தில் திருமா ! மொத்தமும் காலி!

THIRUMAVALAVAN,SANMUGAM
THIRUMAVALAVAN,SANMUGAM

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை. பாஜக வலுவடைந்துள்ளது. தி.மு.க., தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை அரவணைத்து செல்வது அவசியம். தற்போதுள்ள ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளை மதிப்பதில், தி.மு.க.,வை குறை சொல்ல முடியாது;ஆனால், இது நீடிக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தி.மு.க. வெற்றி பெற முடியாது .கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டோம். ஆனால், குறைவாக தந்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால், தி.மு.க., ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றோம்; மனப்பூர்வமாக ஏற்கவில்லை.கட்சி வரலாற்றிலேயே மிகக்குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது, அதுதான் முதல் முறை. அதுவே கடைசியாகவும் இருக்க வேண்டும். இனி அவ்வாறு தொடரக் கூடாது. தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கொடுத்ததை வாங்கிக் கொண்டோம்; அது அந்த காலம். வரும் 2026 தேர்தலில் அது நடக்காது'  விட்டுக்கொடுப்பது தி.மு.க. தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும்.என, தி.மு.க., கூட்டணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது, 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி., 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும். என அதன் மாநில செயலாளர் கூறியுள்ளார். இது திருமாவிற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. கம்யூனிஸ்ட்டே வீரமாக பேசிவிட்டார் திருமா என்ன சும்மாவா என விசிகவினர் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளார்கள். 

இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்து அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவிடம் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், "ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும். குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான். வாடிக்கையான ஒன்றுதான்.ஆனால், பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில அவங்க உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம்.

கூடுதல் தொகுதிகள் கேட்பது குறித்து வெறும் மழுப்பலாக பதில் கூறிய திருமா மீது அக்கட்சியினரரே தற்போது திரும்பியுள்ளார்கள். அடங்க மரு அத்துமீறு என்ற கோஷம் எங்கே சென்றது. எப்போது நமக்கு அங்கீகாரம் கிடைக்கும். இந்த முறை விட்டால் திமுகவுக்கு விசிக வை எழுதி கொடுத்துவிட வேண்டியது தான் என போர் குரல் எழுந்துள்ளது. 2021 தேர்தலில் திமுகவுடன் பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. திருமா வெறும் 6 சீட்டுகளுக்கு திமுகவுடன் கூட்டணி அமைத்தார். 2024ஆம் ஆண்டு தேர்தல் வெறும் இரண்டு தொகுதிகளை பெற்றது.  இந்நிலையில் தான் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் என்று முழங்கிய சிறுத்தை திமுகவிடம் பூனையை போல் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது.. 

மேலும் கூட்டணி இல்லாமல் திமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என கூறியுள்ளது திமுகவை டம்மி பீசா என அரசியல் நோக்கர்கள் கேட்டு வருகிறார்கள்.