24 special

இந்தியாவின் AI ராட்சர்கள்! AI-LMG சோதனை வெற்றி! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை! அலறும் சீனா, பாகிஸ்தான்!

PMMODI,AI
PMMODI,AI

இன்றைய உலகில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களின் அறிவாற்றலை மிஞ்சும் வகையில் இயந்திரங்கள் செயல்படும் திறனைப் பெறுவதுதான் செயற்கை நுண்ணறிவு. மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவதிலிருந்து, போக்குவரத்துத் துறையில் தானியங்கி வாகனங்கள் வரை, செயற்கை நுண்ணறிவு தற்போது பாதுகாப்பு துறை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. 


இந்த நிலையில்  இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பல முக்கியமான மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு துறையில் இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஆயுதங்கள் ஏற்றுமதி ஆகும்.இந்தியா, 92 நாடுகளுக்கு பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது., 2023-24 ஆம் ஆண்டில் ₹21,083 கோடி மதிப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டிலே தயாரிக்கும்  "Make in India" திட்டத்தின் கீழ், இந்தியா பல்வேறு பாதுகாப்பு  உபகரணங்கள், ஆயுத்தங்களை  தயாரித்து கொள்வதனால் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில்  இந்திய ராணுவம் பாதுகாப்பு துறையில் ஒரு புதிய முன்னேற்றமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் துப்பாக்கிகளை வெற்றிகரமாக சோதனை செய்து, அதன் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முக்கிய இடத்திற்குள் நுழைந்து விட்டது. 

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்தியா வெற்றிகரமாக செயற்கை நுண்ணறிவு ஆயுத சோதனையொன்றை நடத்தியுள்ளது.மலைப்பிரதேசத்தில், 14,000 அடி உயரத்தில், நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி  பெற்றுள்ளது. 

 செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்பட்ட இலகுரக இயந்திர துப்பாக்கிகளை சோதனை செய்துள்ளது.டேராடூனில் உள்ள BSS Material Ltd. என்ற இந்திய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கிய இந்த நவீன ஆயுதம், இந்திய ராணுவத்துடன் இணைந்து சோதனைக்குத் உள்ளாக்கப்பட்டுள்ளது. .இந்த AI LMG, இலக்குகளை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.  

மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் கீழ், இது இந்தியாவின் தற்காப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தியா தனது தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. உலக நாடுகளுக்கு இது  பெரும் சவாலாக அமைந்துள்ளது.

 Thermal and optical sensor fusion மூலம் துல்லியமாக இலக்கை அடையாளம் காணும் திறனை பெற்றுள்ளது. காலநிலைக்கு ஏற்றவாறு இந்த தனியங்கி துப்பாக்கி செயல்படும்.  பல் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். இந்த நவீன ஆயுதம், பாதுகாப்பு முகாம்கள், ராணுவ எல்லைகள் மற்றும் உயரமான மலை  பிரேதேசங்கள் தானியங்கி நிலைத்தளவுகளுக்குள் பயன்படுத்தக் கூடியது.மேலும், இந்த AI மொழியியல் கூறு வெவ்வேறு ஆயுதங்களில் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. UGV, RWS, ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் போன்றவற்றிலும் இதனை பயன்படுத்த முடியும்.

இந்த பரிசோதனை, 'Operation Sindoor' வெற்றியின் பின்னர் நடைபெறுகிறது, இதில் இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தான் ஆயுதங்களைவிட சிறப்பாக செயல்பட்டன. AI LMG மூலமாக, இந்தியா தனது ராணுவ ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.