24 special

மிரட்டலாக களமிறங்கிய `கலாஷ்னிகோவ்'... அதிரடி காட்டிய AK 203 மாஸ் அப்டேட்டில் இந்தியா! எதிரிகளுக்கு கிலி

PMMODI
PMMODI

இந்திய ராணுவத்தை மேம்படுத்தி வருகிறது மத்திய அரசு. புதிய புதிய இராணுவ தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்கள் அனைத்தும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.காங்கிரஸ் ஆண்ட இந்தியா இந்திய ராணுவத்திற்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன இந்த நிலையை மாற்றி, உள்நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. 90 நாடுகளுக்கு இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா. இந்திய ராணுவத்தில் தற்போது முக்கிய போர் விமானங்களில் ஒன்றாக உள்ள தேஜஸ் போர் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. தேஜஸ் போர் விமானம் வாங்க பல நாடுகள் போட்டி போட்டு வருகிறது.  இதை மேம்படுத்தியுள்ளது இந்தியா. 


பிரான்ஸின் ரஃபேல் மற்றும் அமெரிக்காவின் F-16 போர் விமானங்களை விட, இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் MK1A போர் விமானம் ஒரு சரியான மாற்று என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தேஜஸ் விமானங்களில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வசதி உள்ளது. அதே நேரத்தில் ரஃபேல் மற்றும் F-16 போர் விமானங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரச் சப்ளை அண்ட் சர்வீசஸ் நிறுவனம் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து பல்வேறு ராணுவ தளவாடங்களைத் தயாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் ஏகே 203 வகைத் துப்பாக்கி பொருத்தப்பட்ட ட்ரோனை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி இந்திய ராணுவத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ட்ரோனுடன் பறக்கும் துப்பாக்கி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தத் துப்பாக்கிகள் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேகம், துல்லியம் மற்றும் தாக்குதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவும் 

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே இந்தத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 ஆயிரம் அடி உயர்த்தில் செயற்கை நுண்ணறிவுத் திறனோடு தானாக இயங்கும் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் அடுத்தகட்டமாகத் துப்பாக்கியுடன் இயங்கும் ட்ரோன்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மிகவும் சவாலான பகுதிகளில் ராணுவ வீரர்களை நிலைநிறுத்துவது கடினம் என்பதால் இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பணியை மேம்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த ட்ரோன் துப்பாக்கியின் சோதனை முயற்சி வெற்றியடைந்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, பாதுகாப்புத்துறையின் திறனையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கி 8 கிலோ கிராம் எடைக் கொண்டதாகும். நிமிடத்திற்கு 850 முதல் 1050 சுற்றுகள் வரைச் சுடும் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ட்ரோன் துப்பாக்கி காற்று, வெப்பநிலை மற்றும் தூரத்தின் அடிப்படையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வசதி படைத்ததாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் வரைத் தானாக இயங்கும் தொழில்நுட்ப வசதிகளோடு, வாகனங்கள், கடற்படைக் கப்பல்களில் இருந்தபடியே இதனைச் செயல்படுத்திடவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தத் துப்பாக்கிகள் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ராணுவம் படிப்படியாகத் தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.