
அமெரிக்கா மீண்டும் தீவிர பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்து இருக்கிறது .இதற்கு காரணம் இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ஆப்பரேசன் சிந்தூர் தாக்குதல் தான்.ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா அடுத்து பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கியது.இதில் அமெரிக்காவின் F-16 விமானங்கள் பல அழிந்து போனதால் அமெரிக்காவிற்கு இந்தியாவின் மீது கோபம் உண்டாகிவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போதைய இந்திய அமெரிக்க உரசல்கள்.இந்தியாவில் தொழில்கள் தொடங்க கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை எந்த அமெரிக்க நிறுவனமும் கேட்கவில்லை. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார் அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த நிறுவனம்.
இதற்கிடையில் 5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலும் அங்கு அமெரிக்க அதிபரும் இருந்த நிலையில் இந்திய தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. ஐபோன் ஏற்றுமதி குறித்து ஒரு செய்திகள் வெளியானது. .
இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை கண்டிப்புடன் அறிவுறுத்திய நிலையிலும் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த தயாரிப்பாளர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த ஐபோன்களின் எண்ணிக்கை 2.04 கோடியை கடந்துள்ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத நிலவரம் மட்டுமே.
கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஐந்து மாதத்தில் ஐபோன் ஏற்றுமதி என்பது 57% அதிகம் என சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் (ஓம்டியா) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025 ஜனவரி-மே வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஐபோன் ஏற்றுமதியில் 77% அமெரிக்காவுக்கு மட்டுமே சென்றுள்ளது. கடந்த 2024 முதல் ஐந்து மாதங்களில் 54% ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதைவிட கூடுதலாக 23% ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.
குறிப்பாக, கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் 89% அளவுக்கு இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஐபோன் ஏற்றுமதியில் அமெரிக்காவின் தேவைக்கு மட்டுமே அதிகமாக முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அது ஏனைய நாடுகளின் ஏற்றுமதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிற நாடுகளுக்கான ஐபோன் ஏற்றுமதி குறைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, நெதர்லாந்து, செக் குடியரசு, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்கான இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ச்சியாக சரிவடைந்து வருகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வரி தொடர்பான வர்த்தகப் போரையடுத்து சீனாவின் ஐபோன் ஏற்றுமதி கடந்த ஏப்ரலில் வெறும் 9 லட்சமாக குறைந்தது.
2024 ஏப்ரலில் 37 லட்சமாக அதிகரித்து காணப்பட்ட ஐபோன் ஏற்றுமதி 4-ல் 1 பங்காக குறைந்துபோனதையடுத்து அமெரிக்காவில் ஐபோன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்க வாடிக்கையாளர்களின் ஐபோன் தேவையை இந்தியா தனது ஏற்றுமதியின் வாயிலாக ஈடு செய்தது.
ஆப்பிள் நிறுவனத்துக்கான ஒப்பந்த தயாரிப்பு பணிகளை டாடா நிறுவனம் வேகப்படுத்தியதே இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், இவ்வாண்டில் இதுவரையில் மொத்த ஐபோன் ஏற்றுமதியில் பாக்ஸ்கான் 52% பங்களிப்புடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதேவேளையில் ஆப்பிளின் வியூகங்களுக்கு ஏற்படாடாவும் உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டில் 13% ஆக இருந்த டாடாவின் பங்கு தற்போது 37% ஆக உயர்ந்துள்ளது. இதை சுட்டி காட்டி இந்தியாவில் தொழில் தொடங்க ஜி7 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி