24 special

மோடி கனடா சென்ற அடுத்த நொடி... டிரம்ப் தலையில் இடியை இறக்கிய இந்தியா! மொத்தமாக மாறிய களம்!

MODI,TRUMP
MODI,TRUMP

அமெரிக்கா மீண்டும் தீவிர பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்து இருக்கிறது .இதற்கு காரணம் இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ஆப்பரேசன் சிந்தூர் தாக்குதல் தான்.ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா அடுத்து பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கியது.இதில் அமெரிக்காவின் F-16 விமானங்கள் பல அழிந்து போனதால் அமெரிக்காவிற்கு இந்தியாவின் மீது கோபம் உண்டாகிவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இப்போதைய இந்திய அமெரிக்க உரசல்கள்.இந்தியாவில் தொழில்கள் தொடங்க கூடாது  என அமெரிக்க நிறுவனங்களுக்கு  நேரடி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை எந்த அமெரிக்க நிறுவனமும் கேட்கவில்லை. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார் அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த நிறுவனம். 


இதற்கிடையில் 5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலும் அங்கு அமெரிக்க அதிபரும் இருந்த நிலையில் இந்திய தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.  ஐபோன் ஏற்​றுமதி குறித்து ஒரு செய்திகள்   வெளியானது. . 

இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஒப்​பந்த தயாரிப்​பாளர்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்து ஏற்​றுமதி செய்த ஐபோன்​களின் எண்​ணிக்கை 2.04 கோடியை கடந்​துள்​ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையி​லான 5 மாத நில​வரம் மட்​டுமே.

கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்​துடன் ஒப்​பிடும்​போது இந்த ஐந்து மாதத்​தில் ஐபோன் ஏற்​றுமதி என்​பது 57% அதி​கம் என சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வன​மான கேனலிஸ் (ஓம்​டி​யா) புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.2025 ஜனவரி-மே வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்த ஐபோன் ஏற்​றும​தி​யில் 77% அமெரிக்கா​வுக்கு மட்​டுமே சென்​றுள்​ளது. கடந்த 2024 முதல் ஐந்து மாதங்​களில் 54% ஐபோன்​கள் ஏற்​றுமதி செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது அதை​விட கூடு​தலாக 23% ஐபோன்​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகி​யுள்​ளன.

குறிப்​பாக, கடந்த மே மாதத்​தில் ஒட்​டுமொத்த ஏற்​றும​தி​யில் அமெரிக்​கா​வின் பங்​களிப்பு மட்​டும் 89% அளவுக்கு இருந்​தது என்​பது கவனிக்​கத்​தக்​கது. ஐபோன் ஏற்​றும​தி​யில் அமெரிக்​கா​வின் தேவைக்கு மட்​டுமே அதி​க​மாக முன்​னுரிமை கொடுக்​கப்​பட்​ட​தால் அது ஏனைய நாடு​களின் ஏற்​றும​தி​யில் கணிச​மான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதாவது பிற நாடு​களுக்​கான ஐபோன் ஏற்​றுமதி குறைந்​துள்​ளது.

அதி​லும் குறிப்​பாக, நெதர்​லாந்​து, செக் குடியரசு, இங்​கிலாந்​து, இத்​தாலி போன்ற நாடு​களுக்​கான இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ச்​சி​யாக சரிவடைந்து வரு​கிறது. அமெரிக்கா​வுக்​கும் சீனா​வுக்​கும் இடையே ஏற்​பட்ட வரி தொடர்​பான வர்த்​தகப் போரையடுத்து சீனா​வின் ஐபோன் ஏற்​றுமதி கடந்த ஏப்​ரலில் வெறும் 9 லட்​ச​மாக குறைந்​தது.

2024 ஏப்​ரலில் 37 லட்​ச​மாக அதி​கரித்து காணப்​பட்ட ஐபோன் ஏற்​றுமதி 4-ல் 1 பங்​காக குறைந்​து​போனதையடுத்து அமெரிக்​கா​வில் ஐபோன்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இந்​தநிலை​யில், அமெரிக்க வாடிக்​கை​யாளர்​களின் ஐபோன் தேவையை இந்​தியா தனது ஏற்​றும​தி​யின் வாயி​லாக ஈடு செய்​தது.

ஆப்​பிள் நிறு​வனத்​துக்​கான ஒப்​பந்த தயாரிப்பு பணி​களை டாடா நிறு​வனம் வேகப்​படுத்​தி​யதே இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி அதி​கரிப்​புக்கு முக்​கிய காரண​மாக கூறப்​படு​கிறது. இருப்​பினும், இவ்​வாண்​டில் இது​வரை​யில் மொத்த ஐபோன் ஏற்​றும​தி​யில் பாக்​ஸ்​கான் 52% பங்​களிப்​புடன் முதலிடத்தை தக்​க​வைத்​துக்​கொண்​டுள்​ளது. அதேவேளை​யில் ஆப்​பிளின் வியூ​கங்​களுக்கு ஏற்படாடா​வும் உற்​பத்​தியை வேகப்​படுத்​தி​யுள்​ளது. 2024-ம் ஆண்​டில் 13% ஆக இருந்த டாடா​வின் பங்கு தற்​போது 37% ஆக உயர்ந்துள்ளது. இதை சுட்டி காட்டி இந்தியாவில் தொழில் தொடங்க ஜி7 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி