24 special

சென்னை "மேயர்" பிரியாவிடம் கே.என்.நேரு நடந்துகொண்ட விதம் வெளுத்து எடுத்த நாச்சியாள் சுகந்தி !

Nachiyal suganthi ,Mayar priya,  kn nehru
Nachiyal suganthi ,Mayar priya, kn nehru

அமைச்சர் கேஎன் நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா இருவரும் ஒன்றாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர் அப்போது அமைச்சர் நேரு மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதும், கடிந்து கொண்டதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அதில் ஒருபகுதியாக நாச்சியாள் சுகந்தி தனது கருத்தை கடுமையாக பதிவு செய்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது,அமைச்சர் நேரு சென்னை மேயரை மிரட்டுகிறார்

சேகர் பாபு, அது குழந்தை என்கிறார்.தமிழகத்தின் முக்கியமான மாநகராட்சியின் மேயர் பிரியா. ஆனால் அவரை ஒரு வோடஃபோன் நாய்க்குட்டியை போல நடத்துகிறார்கள் திமுக அமைச்சர்கள். சேகர்பாபுவுடன், ஓட்டப்பந்தய வீராங்கனையை போல ஓடவிட்டு உதயநிதியை வரவேற்க விட்டார்கள்.

இன்னும் இன்னும் எத்தனை அவமானங்களை அம்மேயருக்கு நடத்துவார்களோ தெரியவில்லை.பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் பெண்கள் அரசியல்மயமாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இடமளிக்க வேண்டும் என்றுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

ஆனால்,பட்டியலின பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம் என்று அடையாள அரசியல் செய்யும் திமுக மேயர் ப்ரியாவை அறிவாலயத்தின் அழகிய நாய்க்குட்டி என்றே நம்புகிறது. அதற்கேற்றவாரே அவரை நடத்துகிறது.இதில், தலித் பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம். அவரை பார்பனர்களும் வணக்கத்துக்குரிய மேயர் என்றே அழைக்க வேண்டும் என்று வெற்றுப்பெருமை பேசிய வாய்வீச்சுகள் எல்லாம் இப்போது வாய்மூடி இருக்கிறார்கள்? என தெரிவித்துள்ளார்.

பலரும் கேஎன் நேரு மீது விமர்சனம் வைக்க தொடங்கி இருக்கும் சூழலில் இனியாவது பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை திமுகவை சேர்ந்த தலைவர்கள் கொடுப்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.