24 special

மீண்டும் தொடரும் பழைய முறை திருட்டு!!! லிப்டில் செய்பவர்கள் பீதி!!

LIFT ISSUE
LIFT ISSUE

 இன்று உள்ள உலகத்தில் ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. முதலில் எல்லாம் திருட வருபவர்கள்  பார்ப்பதற்கே மிகவும் கரடு முரடாக இருப்பார்கள். ஆனால் இன்று உள்ள திருடர்கள் மிகவும் நீட்டாகவும், பார்த்தால் அவர்கள் திருடர்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர்களின் உடையும், செயல்களும் இருந்து வருகிறது. முதலில் எல்லாம் நடந்த திருட்டுக்கள் எப்படி நடக்கும் என்று பார்த்தால் வீட்டில் ஆட்கள் இல்லாத பொழுது வீட்டில் போடப்பட்ட பூட்டினை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை திருடுவார்கள் அல்லது சாலைகளில் நடந்து செல்பவர்களை நிறுத்தி அவர்களிடம் கத்தி போன்றவற்றை காமித்து அவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை பரித்து செய்வார்கள். மேலும் ஏதேனும் மயக்கம் மருந்தினை கலந்த ஒரு துணியை வைத்து அவர்களின் மூச்சினை அடக்கி அவர்களை மயக்கமடைய செய்து அவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை திருடி செல்வார்கள். ஆனால் இன்றைய காலங்களில் இந்த பழக்கவழக்கங்கள் கொஞ்சம் நிறுத்தி டிஜிட்டல் முறையில் திருட்டுகள் நடந்து வருகிறது. 


அதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த பழைய முறையில் திருட்டு நடைபெறும் செய்திகளை நாம் அறிய முடிகிறது. எங்க பார்த்தாலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பது திருடர்களுக்கு பயமுறுத்தும் ஒன்றாகவே இருந்து வருவதால் அவர்களின் சேட்டைகள் கொஞ்சம் குறைவாகவே இருந்து வந்தது. சிலர் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் கூட அதனை மறைத்தோ அல்லது உடைத்தோ விட்டு அவர்களுக்கான பொருட்களை திருடி செல்வதை தொடர்ந்து வந்தனர். ஆனால் அதிக அளவில் டிஜிட்டல் முறையில்  அப்பாவிகளிடமிருந்து  அவர்களின் வங்கி கணக்குகளின்  விவரங்களை வாங்கி அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்குகளின் உள்ள பணங்களை  திருடுவது இப்போது ஒரு டிரண்டாகவே இருந்து வந்தது. ஆனால் இங்கு ஒரு திருட்டு பழைய ஒரு முறையில் திரும்பி கையெடுக்கப்பட்டு தற்போது நடந்துள்ளது.  அதுவும் அந்த திருட்டு செயலில் ஒரே ஒரு பெண் ஈடுபட்டு இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணின் பின்னால் வேறு ஏதும் கும்பல் இருக்குமா என்றும் யோசிக்க வைக்கிறது. அப்பெண் திருடும் முறை எப்படி இருந்தது என்று பார்த்தால்!!! 

 ஒரே ஒரு பெண் லிப்டில் முகத்திற்கு மாஸ்க் எல்லாம் அணிந்து நின்று கொண்டே இருக்கிறார். அப்போது லிப்டில் ஒரு ஆண் வந்து ஏறியவுடன் அமைதியாக எதுவும் செய்யாமல் நிற்கிறார். அதன் பின் அந்த ஆணும் அவரின் ப்ளோர் வந்தவுடன் இறங்கி விடுகிறார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ஆண் அந்த லிப்டில் ஏறியவுடன் அடுத்த பிளோருக்கு லிஃப்ட் செல்கிறது. போதும் அந்தப் பெண் அமைதியாக இருந்து வருகிறார். வந்தவர்கள் இருவருமே ஆண்கள் என்பதாலும் அவர்களிடம் எந்த ஒரு பொருட்களும் பெரிய அளவில் இல்லாததாலும் அவர்களை ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்து வந்த அந்த திருடும் பெண் லிப்டிலேயே நின்று கொண்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக அப்போது ஒரு பெண் அந்த லிப்டின்னுள் வருகிறார். அந்த புதிதாக வந்த பெண்ணிடம் பேக் மற்றும் செல்போன் போன்ற பொருள்கள் இருப்பதை பார்த்த அந்த திருடும் பின் லிப்டினை செலுத்தி விட்டு கையில் உள்ள மயக்க மருந்து பூசப்பட்ட கட்சி வினை புதிதாக வந்த பெண்ணின் மூக்கில் வைத்து மூச்சுினை அடைக்கிறார். சிறிது நேரம் போராடிவிட்டு அந்தப் பெண் மயக்கம் நிலைக்கு சென்று விடுகிறார். அதன் பின் அந்த திருடும் பெண் மயக்கமடைந்த பெண்ணிடம் உள்ள பொருட்கள் மற்றும் பணத்தினை எடுத்து விட்டு லிப்டிலிருந்து வெளியேறி செல்கிறார். இதுபோன்று திருட்டு செயலில் ஈடுபட்டிருப்பது கேமராவில் பதிவாகி இருப்பது தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது!!