24 special

துண்டு துண்டாகும் பாகிஸ்தான்! தூக்கி அடிக்கப் போகும் இந்தியா!பதற்றத்தில் பாக்..வெளியான முக்கிய அப்டேட்!

PMMODI,SHEHBAZ SHARIF
PMMODI,SHEHBAZ SHARIF

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாதது, பாகிஸ்தான் அதிகாரிகளின் சுரண்டல் ஆகியவற்றை கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் களம் போர்க் களமாக மாறியிருக்கிறது… மக்கள் போராடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் ராணுவம், அடக்குமுறையை கையாண்டுள்ளது. 

ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டமன்ற தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 12 அப்பாவி மக்கள் இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள், அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை கையாண்டாலும், நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலகமாட்டோம் என்றும் முழங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அரசு, துரும்பைக் கூடக் கிள்ளிபோடவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கையாண்டுவரும் அடக்குமுறை சம்பவங்கள் ஷெபாஸ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளது.

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அவாமி ஆக்ஷ்ன் கமிட்டி கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதாகக் கூறும் ஆட்சியாளர்கள், சுரண்டலையும், அடக்குமுறைகளையுமே தடையின்றி வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மின் கட்டண உயர்வு, உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம், தற்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.

ஆனால் இதற்கு நியாயமான தீர்வு காண முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசோ, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் தயாராக நிறுத்திவைத்துள்ளது. அண்மையில் கைபர் பக்துன்கவா பகுதியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலுசிஸ்தான் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பலுச் விடுதலைக் குழுக்கள் (Baloch Liberation Army உள்ளிட்டவை) பாகிஸ்தான் இராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. தனி நாடு கேட்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. பலுசிஸ்தான் ஆப்கான் எல்லையை ஒட்டி வருகிறது எனவே ஆப்கானும் பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளாதால் விரைவில்  பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதையும். 

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி, அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்தப் பயணத்தை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாகிஸ்தானை நெருக்கமாக கண்காணிக்கவும், இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு பயங்கரவாதிகள், அரசு போடும் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும் நமக்கு நெருக்கமான நட்பு தேவை. அது ஆப்கானிஸ்தானாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக கடுமையாக பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது. கட்டமைப்பு, மறுமலச்சி, மீட்சிக்கு அதிக நிதியும், சர்வதேச ஆதரவும் அந்நாட்டுக்கு தேவை. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொண்டு ஆப்கானுடன் நட்பாகலாம்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்கள் கிடைக்கும். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நட்பு உறவை வளர்ப்பது என்பது, பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணிக்க நாம் மேற்கொள்ளும் யுக்தி என்பது குறிப்பிடத்தக்கது.ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணையும்!