24 special

கதறிய சேகர் பாபு...!அண்ணாமலை வைத்த ஆப்பு...!

Annamalai, seker babu
Annamalai, seker babu

அண்ணாமலை வெளிநாடு சென்று திரும்பிய முதல் நாளே தற்போது வெளியிட்டு இருக்கும் அறிக்கையால் சில மாதங்கள் நிம்மதியாக இருந்த சேகர் பாபு தற்போது கதற தொடங்கும் நிலை ஒரே நாளில் உண்டாகி இருக்கிறது.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம்நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும்வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைதொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.


வருடாவருடம் நடைபெறும்ஆனித் திருமஞ்சனம் விழாவின் முடிந்து நான்கு நாட்களுக்கு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ளகனகசபை, மக்கள்பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே.இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம்நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பதுபக்தர்களை மட்டும் அல்ல, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம்மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்என்பதை, அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ளவேண்டும்.

13.12.1951,2591/1951 மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மாண்புமிகுசென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீக்ஷிதர்கள்,இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 26ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு (Denominatedcommunity) என்றும், 668/1951 என்ற மனுவின் மீதான விசாரணைக்குபிறகு வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகஅதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும்தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனை எதிர்த்து, 1953 ஆம் ஆண்டு, மெட்ராஸ் மாகாண அரசுஉச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. மேலும், 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படி, இந்து சமயத்தின்உட்பிரிவுகள் (Denominated Community) நிர்வகிக்கும் கோவில்களில்,தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இன்று நடக்கும் அத்துமீறல் போல்,முந்தைய திமுக ஆட்சியிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்துசமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர,2009ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப்புறம்பானது என்று அறிவித்தது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தமிழக அரசு இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம்நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி,கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிதம்பரம் நடராஜர் கோவிலின், நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளநகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை, தீக்ஷிதர்களால் ஏற்கப்பட்டு, அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்தத் திறனற்ற திமுக அரசு, தொடர்ச்சியாகசிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்சினையைஉருவாக்கவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதிகாரவரம்பை மீறும் செயலாக, சென்ற ஆண்டு மே மாதம், தமிழகஅரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும்ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்தஅரசாணையைக் கூட, தீக்ஷிதர்கள் எதிர்க்கவில்லை.ஆனித்திருமஞ்சனம் விழாவின் போது, கோவில் நகைகள் அனைத்தும்தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால்,பாதுகாப்புக் காரணங்களுக்காக, நான்கு நாட்கள், கனகசபைபொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ்இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, கோவில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையானநடைமுறையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 3500 ஏக்கர் நிலத்தைப்பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர், கடந்த 15ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளைதெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின்மூலமாக வரும் வருவாயை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில்செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபுபதில் அளிக்கவேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள, 37000க்கும்மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார்தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்ற, மாண்புமிகு சென்னைஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட மதிக்காமல் செயல்பட்டு வரும்அமைச்சர் திரு சேகர் பாபு, தனது அதிகார வரம்பை உணர்ந்தால்நன்று.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளகோவில்களின் சொத்துக்கள், கொள்ளை அடிக்கப்படுவதை கைகட்டிவேடிக்கை பார்ப்பதையும், ஆட்சியின் அவலங்களை மறைக்க,கோவில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதையும்திறனற்ற திமுக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

திறனற்ற திமுகவின் செயல்பாடுகள், இந்து சமயத்திற்கு எதிராகமட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத்தீர்ப்புகளுக்கும் எதிரானது.இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கைஇல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களைகொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக,சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும்தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக சேகர் பாபு தனது செயல்பாடுகள் மற்றும் பேட்டிகள் மூலம் அண்ணாமலையிடம் வாங்கி கட்டி கொண்டார் அதன் பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்த சேகர் பாபு தற்போது சிதம்பரம் கோவில் விஷயம் மூலம் உள்ளே வந்து சேகர் பாபு தரப்பிற்கு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.