24 special

சார் பிளீஸ் சண்டை வேண்டாம்.வழிய வந்த கனடா பிரதமர்! சட்டென மோடி எடுத்த முடிவு. .. இப்போ தெரிகிறதா இந்தியா பவர்! .

Mark carney ,pmmodi
Mark carney ,pmmodi


இந்தியாவிற்கும், கனடாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. கனடா பிரதமராக  ஜஸ்டின் ரூட்டோ இருந்த போது காலிஸ்தானிகள் பேச்சை கேட்டு கொண்டு இந்தியாவிடம் முட்டி மோதி கொண்டிருந்தார். இந்தியாவிடம் மோதல் போக்கை கைவிட அக்கட்சி எம்.பிகள்  கூறினார்கள் ஆனால் அதை கேட்காமல் காலிஸ்தான் பேச்சை மட்டுமே கேட்டுவந்தார் ஜஸ்டின் ரூட்டோ இதனால் கோபமடைந்த 20-க்கும் மேற்பட்ட லிபரல் கட்சி எம்.பி.க்கள் அவர் பதவி விலக வேண்டும் என போர்கொடியை தூக்கியதை தொடர்ந்து பதவி விலகினார் ஜஸ்டின் ரூட்டோ



இதற்கிடையே தான் கனடா ஜி 7 உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி பேசினார். மோடியும் மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் மோதலுக்கு நடுவே இந்தியாவை அழைத்தது ஏன்? என்பது பற்றி கேள்விக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி தந்த விளக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா உறுப்பு நாடாக இல்லை. இருப்பினும் கூட ஜி 7 நாடுகளுடன் நம் நாட்டுக்கு நல்ல உறவு என்பது உள்ளது.


இதனால் ஜி 7 உச்சி மாநாட்டை ஏற்று நடத்திய நாடுகளின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக அந்த மாநாட்டில் பங்கேற்று வருகிறார்.இந்த முறை கனடாவில் நடக்கும் பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளனர். 


இதற்கிடையே தான் நேற்றைய தினம் கனடா பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார். கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து கூறினேன். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள்.இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கனடா செல்வது உறுதியாகி உள்ளது


இந்நிலையில் தான் கனடா - இந்தியா இடையே மோதல் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஜி 7 உச்சி மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர், ‛‛ஜி 7 உச்சி மாநாட்டில் பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் துறையின் முன்னேற்றம், கனிம வளங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையேயான கூட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.


இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதேபோல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. இதனால் இந்த கூட்டத்தில் இந்தியாவின் இருப்பு அவசியம். மேலும் இந்தியா என்பது பல விநியோக சங்கிலிகளுக்கு மையமாக உள்ளது. இதனால் ஜி 7 மாநாட்டில் இந்தியாவின் இருப்பு என்பது மிகவும் முக்கியம். அதேபோல் கனடாவும், இந்தியாவும் சட்ட அமலாக்கம் தொடர்பாக பேச உள்ளோம். இதற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். இது இருநாடுகள் இடையேயான பிரச்சனைகளை தீர்த்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும்'' என்றார்.