24 special

"சுபவீ" குறித்த மற்றொரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்த தமிழச்சி..!

Subavee and tamilachi
Subavee and tamilachi

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி தற்போது மற்றொரு முக்கிய விவகாரம் ஒன்றிணை பகிர்ந்துள்ளார், அதாவது சுபவீ பாண்டியன் கிறிஸ்தவ மதத்திற்கு ஒரு பெரியாரிஸ்ட் பெண்ணை மாற சொல்லி அந்த குடும்பம் வற்புறுத்திய நிலையில் அதனை சுபவீ எதிர்க்காமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து அவர் முகநூலில் தெரிவித்த தகவல் பின்வருமாறு :-திராவிட இயக்கத் தமிழர் பேரவை உறுப்பினர் ஜோ பிரிட்டோவை காதலித்து திருமணம் செய்த பின் கிறிஸ்தவ மதம் மாற்றம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதால் தலைவர் சுபவீயிடம் அப்பெண் முறையிட்ட போது அதை நியாயப்படுத்தி மதம் மாறச் சொல்லி இருக்கிறார்என தமிழ்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பெரியாரிஸ்ட் என்ற பெயரில் சிலர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி வரும் தமிழச்சி ஏற்கனவே சுபவீ குறித்த திருமணம் தாண்டிய உறவு குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது, தற்போது சுபவீயிடம் தன்னை மதம் மாற சொல்லி வற்புறுத்தல் செய்கிறார்கள் என முறையிட வந்த பெண்ணை.,

சுபவீ எந்த கருத்தும் சொல்லாமல் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக நின்றார் என்ற குற்றசாட்டு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

பெரியாரிஸ்ட் பெரியாரிஸம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன தவறுகள் தமிழகத்தில் நடைபெற்றது என்பதனை கண்டறிய  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என பலரும் இப்போது வலியுறுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி இதுவரை குற்றம் சுமத்திய முக்கிய தலைவர்கள் யாரும் பொது வெளியில் வெளியே வந்து கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் மறுத்து எந்த கருத்தையும் கூறாதது குறிப்பிடத்தக்கது.