
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வியூகங்கள் வகுத்து வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரை 8 மண்டல செயலாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுஇந்த நிலையில் உட்கட்சி பூசலும் அதிகமாகியுள்ளதால் என்னசெய்வதென்று பபுரியாமல் முழித்து கொண்டுள்ளாராம் திமுக தலைவர் முக.ஸ்டாலின். ஒருபக்கம் உதயநிதி,கனிமொழி என் குடும்ப பிரச்சனை, அமலாக்கத்துறையின் கிடுக்குபிடி, தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தலைக்கு மேல் பிரச்சனையை வைத்து கொண்டு வெளியில் தெரியாமல் இருக்க போட்டோ சூட் ஊட்டி சுற்றுலா பயணம் அவ்வப்போது ஊடங்களில் பேசுவது, கட்சி மீட்டிங்,என பிசியாக காட்டி கொள்கிறார் முதன்மையானவர்.
இந்த நிலையில் இன்னொரு தலைவலியை கொடுத்துள்ளார்கள் திருச்சி திமுகவினர். நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். ஒரு காலத்தில் திருச்சி மாவட்ட திமுக என்றால் அது கே.என்.நேருவின் முகமாக மட்டுமே இருந்தது. ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்துக்கே செயலாளராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்ணசைவில் வைத்திருந்தார். அதன் பிறகு அன்பில் மகேஸ் அவருக்குப் போட்டியாக மாவட்ட திமுக-வில் தலைதூக்க ஆரம்பித்தார். இதனால் நேருவை பிடிக்காதவர்கள் எல்லாம் மகேஸ் பக்கம் அணிவகுத்தார்கள். மகேஸ் தலைமைக்கு நெருக்கமான இன்னொரு பிள்ளை போல் இருந்ததால் அவரது வளர்ச்சியை நேருவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேசமயம் கள வீரரான நேருவையும் தலைமையால் ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் நேரு திமுக-வின் முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்ததால் தலைமைக்கழக நிர்வாகிகளில் ஒருவரானார். அதேபோல் திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்டத்துக்கு அன்பில் மகேஸ் செயலாளரானார். கூடவே, தேர்தலில் வெற்றிபெற்று நேருவுக்கு நிகராக அமைச்சரும் ஆனார்.
நேரு தலைமைக் கழக நிர்வாகியாகிவிட்டதால் இனி திருச்சி திமுக முழுமையாக மகேஸ் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி நடக்காமல் திருச்சி வடக்கு, மற்றும் மத்திய மாவட்டங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டார் நேரு. இதனால், கோஷ்டி பூசல் உச்சமடைந்தது.இந்த நிலையில், அமைச்சர் நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கில் உள்ள எடமலைப்பட்டிபுதூரில் கட்டிமுடிக்கப்பட்ட மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிட திறப்பு விழா கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அமைச்சர்கள் நேருவும் மகேஸும் கலந்து கொண்ட இந்த விழாவை துணை மேயர் திவ்யா உள்ளிட்ட அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டார்கள்.
அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக விழாவை புறக்கணித்த நிலையில்,இந்த விஷயம் தற்போது திமுகவில் பூதாகரமாக வெடித்துள்ளது. உதயநிதி தரப்பில் அன்பில் மகேஷ் கையில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இது குறித்து தலைமையிடம் கூறியுள்ளார். பச்சைக்கொடி காட்டி உள்ளார்கள் தலைமை. இந்த விஷயம் கே என் நேருவுக்கு தெரிந்ததால் தலைமையின் மீது கடும் கோபத்தில் உள்ளாராம். மேலும் திருச்சியில் மண்டல் தேர்தல் பொறுப்பாளர்களாக நேருவின் ஆதரவாளர்களை போட்டு வருகிறாராம்.
இதனை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பதை நிறுத்தி வைக்க அறிவாலயத்தில் இருந்துநேருவிற்கு சமிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இதனால் உட்சபட்ச கோபம் அடைந்த நேரு தேர்தல் வேலைகளில் இருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளாராம். அன்பில் மகேஷை வைத்து திருச்சியை கைப்பற்றிக் கொள்ளுங்கள் என ஓப்பனாக சேலஞ்ச் செய்துள்ளார். இந்த விஷயம் போட்டோ ஷூட் செய்பவருக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம் இதற்கெல்லாம் காரணம் உதயநிதி தான் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறதாம் அறிவாலயத்தின் மேல் மட்டம்