
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நம்மிடம் அடிவாங்கிய பாகிஸ்தான் சரணடைந்தது. நம் நாட்டின் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் காலியாகின. அதேபோல் ராணுவ தளம் விமான தளம் என்று மொத்தம் 12 இடங்கள் கடும் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் நிலைக்குலைந்துபோன பாகிஸ்தான் ‛‛நாங்கள் உங்கள் வழிக்கு வரமாட்டோம். தயவு செய்து தாக்குவதை நிறுத்துங்கள்'' என்று கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு மோதலை கைவிட்டது. தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.இருப்பினும் பயங்கராதிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் பாகிஸ்தானை நம்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகளை நம் நாட்டுக்குள் அனுப்பலாம் என்பதால் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒரு பகுதியாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் சிந்து நதிகளின் கண்ட்ரோல் இந்தியாவுக்கு முழுமையாக வந்துள்ளது.. இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே நீரைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் பீதியில் இருக்கிறது. மேலும், இப்போது பாகிஸ்தானுக்கு வேறு ஆப்ஷன்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை. பயங்கரவாதமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் கூட பல்வேறு இடங்களில் இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்.
இந்தியா இந்த நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் உண்மையில் பயந்து போய் இருக்கிறது. "இந்தியா தண்ணீரை நிறுத்தினால் மட்டுமில்லை.. தாமதப்படுத்தினால் கூட பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் தான். தற்போது சிந்து நதி முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென நீர் திறந்துவிடப்பட்டால் அது வெள்ளம் போல பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தையே மூழ்கடிக்கும். இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானில் உணவுக்கே கூட சிக்கல் ஏற்படும்சிந்து நதி நீர் கிடைக்காமல் பாகிஸ்தான் ஏற்கனவே பதற ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாகவே ஈரான் சென்றிருந்த அந்நாட்டின் பிரதமர் ஷெரீப், அங்கிருந்தபடி பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனாலும், இந்தியா தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு பிறகே எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருக்கும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது.
அதுமதுவுமில்லாமல் இதற்கிடையே தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்நாட்டுடன் சேரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது அதிக கவனத்தை பெற்றுள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணம் என்பது காஷ்மீர் தான். நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது.
டெல்லியில் சிஐஐ (CII or Confederation of Indian Industry)வணிக உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை உணர்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றி பேசுகிறது. அன்பு, ஒற்றுமை மற்றும் உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் திரும்பி வந்து, நான் இந்தியா, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை. என கூறியது உலக நாடுகளை யோசிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே சிந்து நீர் நிறுத்திவைப்பு. ஆப்ரேசன் சிந்தூர் போன்ற நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில் ராஜ்நாத் சிங் இப்படி பேசி உள்ளதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற மத்திய அரசு வேறு திட்டம் எதுவும் வைத்துள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.