24 special

"100 கோடி" நஷ்ட ஈடு கேட்ட நீங்கள் அதை "மறந்துடீங்களே" பாஜகவினர் கிண்டல்!

Annamalai and stallin
Annamalai and stallin

விருதுநகரில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், இந்த குற்றத்தில் தொடர்புடைய  திமுக பிரமுகர்கள் இருவர் உட்பட 8 பேரை காவல்துறை கைது செய்தது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாகவும் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என விருதுநகரில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு தனியே செல்லவில்லை ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம்?" என்று காட்டமான கேள்வியுடன் கண்டன உரையை முடித்தார்.

இந்த சூழலில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி  கூறியதாவது :- முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்த ஆர்எஸ் பாரதி ஏன் முதல்வர் ஸ்டாலின் தனது மகன் மருமகன் பேரன் பேத்தி என குடும்பத்தையே அழைத்து சென்றார் அதற்கான காரணம் என்ன என அண்ணாமலை கேட்டாரே? அதற்கு ஏன் பதில் இல்லை.

அரசு பயணம் என்றால் ஏன் குடும்பத்தை அழைத்து சென்றார் என அண்ணாமலை கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் பின்பு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் என பாஜகவினர் நக்கல் அடித்து வருகின்றனர். இதே போல் பதிலுக்கு பிரதமர் குறித்து தவறான தகவலை பகிர்வதாக பாஜகவினர் திமுகவினர் மீது வழக்கு தொடுத்தால் 1000 கோடி கூட பாத்தது என பதிலடி கொடுக்கின்றனர் பாஜகவினர்.

மேலும் திமுகவின் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை அதில் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  திமுகவின்  அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.