
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே, பரபரவெனத் தயாராகத் தொடங்கிவிட்டன அனைத்து கட்சிகளும். ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு பெரும் நெடுக்கடியான தேர்தலாக மாறியுள்ளது இந்த தேர்தல் வாழ்வா சாவா என்ற போட்டியில் தான் உள்ளது திமுக. மக்களிடம் வெறுப்பை எப்படி சமாளிப்பது, உட்கட்சி பிரச்சனைகள் குடும்ப பிரச்சனைகள் என கோபலகோபுரத்தின் கழுத்தை நெறித்து வருகிறது. இதையெல்லாம் தாண்டி திமுக வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு திமுகவின் நிர்வாகிகளே முடியவே முடியாது என ஸ்டாலினிடம் அடித்து சொல்லியதுள்ளது அறிவாலய வாட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வரும் தேர்தல் பனியின் ஒரு பகுதியாக, திமுக உட்கட்சிக்குள் இருக்கும் ஏராளமான பிரச்னைகளைச் சரிசெய்ய தொகுதிப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்புக்குழு என மூன்றடுக்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ‘அந்த அமைப்புகளால் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியவில்லை அதனை தொடர்ந்து, “தொகுதிவாரியாக நானே நிர்வாகிகளைச் சந்திக்கப்போகிறேன். `ஒன் டு ஒன்’ நானே அவர்களிடம் பேசப்போகிறேன்” என்று கடந்த ஜூன் 1-ம் தேதி, மதுரையில் நடந்த பொதுக்குழுவில் அறிவித்தார் தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.
அறிவித்தபடி, ‘உடன்பிறப்பே வா...’ என்கிற தலைப்பில், நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியும் அறிவாலயத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அதில்தான் அதிருப்தியும் புகார்களும் வெடித்துக் கிளம்புகின்றன. “நிர்வாகிகளின் குறைகளை, தலைவர் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அவர் கேட்கத் தயாராக இருந்தாலும் சீனியர்கள் விடுவதில்லை. ‘தலைவரோட மனசு கோணாமப் பேசுங்க...’ என்கிற கண்டிஷனோடுதான் அறைக்குள்ளேயே ஸ்டாலினிடம் அனுப்பிவைக்கிறார்கள் சீனியர்கள். இது ஆய்வுக் கூட்டமில்லை; அலங்காரக் கூட்டம்...” என்று கொதிக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.
திமுகவில் உட்கட்சிப்பூசல்களும், கோஷ்டி மோதல்களும் . 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே அது அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், தலைமைக் கழகம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக, தி.மு.க-வினரே போட்டிக்கு நின்றனர். பல இடங்களில் வெற்றியும் பெற்றனர். அதேபோல, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தலைவர் பதவிகளைக்கூட தி.மு.க-வினரே கைப்பற்றினர். டென்ஷனான தி.மு.க தலைமை, “கூட்டணிக் கட்சியினருக்கும், தலைமைக் கழகம் நிறுத்திய வேட்பாளருக்கும் எதிராக வெற்றிபெற்ற கழக உடன்பிறப்புகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என உத்தரவு போட்டது.
அந்த உத்தரவை ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானோர் சுத்தமாக மதிக்கவில்லை. அதன் தாக்கம், அடுத்தடுத்த பிரச்னைகளிலும் எதிரொலித்து வெடித்துக்கொண்டேபோனது. கருணாநிதி இருந்தபோதேகூட உட்கட்சித் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் முன்னிறுத்தும் வேட்பாளருக்குப் போட்டியாகப் பலர் போட்டியிடுவது உண்டு. அப்படி முறுக்கிக் கொள்பவர்களையெல்லாம் அழைத்து, அன்பாகவும் அரட்டியும் வழிக்குக் கொண்டுவருவார் கலைஞர். ‘நான் இருக்கேன்ல... பார்த்துக்குறேன்யா...’ என்பார். பேராசிரியர் அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் என ஒரு டீமே உட்கட்சிப் பிரச்னைகளைச் சரிசெய்ய கலைஞருடன் இருந்தனர். அது போன்ற ‘டீம்’ தலைவர் ஸ்டாலினிடம் இப்போது இல்லை.
மேலும் உடன் பிறப்புகள் “அறிவாலயத்துக்கு வருவதென்றாலே நிர்வாகிகளுக்கு அவ்வளவு சந்தோஷம் ஏற்படும். அதுவும், தலைவரே வரச் சொன்னதும் ரொம்பவும் சந்தோசப்பட்டுளார்கள் திமுகவினர். அந்த சந்தோஷமெல்லாம் சந்திப்பு நடக்கும் அறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே கலைந்துவிட்டது. ‘தலைவர் மனம் கோணாமப் பேசுங்க. தொகுதியின் பிரச்னையை மட்டும் பேசுங்க. தேவையில்லாம எதையும் பேசாதீங்க... அவர் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாலே போதும்...’ என்று சொல்லித்தான் உள்ளேயே அனுப்புகிறார்கள் அறிவாலயத்திலுள்ள சீனியர் நிர்வாகிகள்.
கழக நிர்வாகிகளுடனான சந்திப்பைக்கூட, ஒரு நிறுவன நிகழ்ச்சியைப்போல மாற்றியிருக்கிறார்கள். ‘செல்ஃபி பாயின்ட்’ எல்லாம் வைத்து,ஸ்டாலினின் பொம்மையோடு புகைப்படம் எடுத்துச் செல்லுங்கள்’சொல்லியுள்ளார்கள் , மக்கள் மனதில் அவ்வளவு வெறுப்பு உள்ளது அவர்களிடம் தேர்தல் சமயத்தில் கழக நிர்வாகிகள் தான் பேச வேண்டும். அதற்கு, கழக நிர்வாகிகளின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அதைக் கேட்பதற்குத்ஸ்டாலினும் தயாராக இல்லை; அறிவாலயத்தில் இருப்பவர்களும் அதற்கு விடுவதில்லை. ‘உடன்பிறப்புகளின் சந்திப்பு’ எனக் கூறிக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்ஸ்டாலின் ..”