24 special

படித்து படித்து சொல்லியும் கேட்கலையே...! மொத்தமாக மாறிய களம்...! இப்போ தெரிகிறதா இந்தியா பவர்! மொத்த கதையும் ஓவர்

shebab sharif ,Chenab bridge
shebab sharif ,Chenab bridge

ஆப்ரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் அல்லாத நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பின், செனாப் உள்ளிட்ட நதிகளில் அணைகள் கட்டும் பணி வேகமடைந்துள்ளது. அதனால், பாகிஸ்தான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.


அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகிறது. பாகிஸ்தான் கடன் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.. இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே அது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதி நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது அமெரிக்க டாலரில் 269.344 பில்லியன் பாகிஸ்தான் கடன் இருக்கிறது..

இப்போது பாகிஸ்தானின் மொத்த கடன் (மார்ச் 2025) 76,007 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய், அதாவது 76 டிரில்லியன் பாக். ரூபாயாக இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் இந்தளவுக்கு உச்சத்தை எட்டியதே இல்லை. வரலாறு காணாத அளவுக்குப் பாகிஸ்தான் கடன் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை இது காட்டுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இன்று நாம் எந்த நட்பு நாட்டிற்குச் சென்றாலும் அல்லது அந்த நாட்டின் தலைவருக்கு போன் போட்டாலும் நாம் அவர்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டோம் என்று நினைக்கிறார்கள். சிறிய நாடுகள் கூட பாகிஸ்தானை விஞ்சிவிட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நாம் பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என அழுதே விட்டார். 

இதற்கிடையே பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் நடவடிக்கையாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.மேலும் பாகிஸ்தானுக்குமூன்று நதிகளில் நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான இந்தியாவின் திட்டங்களைப் பாகிஸ்தான் பல்வேறு பொய் காரணங்களைச் சொல்லி இன்றுவரை தடுத்து வருகிறது. ஏற்கெனவே, 2017ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் எட்டு நீர்மின் திட்டங்களை விரைவாகக் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டது. மொத்தம் சுமார் 567 கோடி ரூபாய்  செலவில் 6,352 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயல் திட்டமாகும்.

இதே போல் சாவல்கோட்டில் 1,856 மெகாவாட், கீர்த்தாய் பகுதியில் 390 மெகாவாட், கீர்த்தாய் இரண்டில்  930 மெகாவாட் , பகால் துல்லில் 1,000 மெகாவாட், குவாரில் 540 மெகாவாட், கிருவில் 624 மெகாவாட், பர்சாரில்  800 மெகாவாட் மற்றும்  212 மெகாவாட் பல்நோக்கு உஜ் திட்டம் ஆகிய பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

செனாப் நதியின் மீது 1,856 மெகாவாட் சவால்கோட் நீர்மின் திட்டம் 2025ம் ஆண்டுக்குள் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படும் இலக்குடன் இதன் கட்டுமானம் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மற்றும் உதம்பூர் மாவட்டங்களின் விவசாய வளர்ச்சிக்கான இந்த திட்டம், பெரிய அளவிலான தண்ணீரைச் சேமிக்காமல், நிலையான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.சாவல்கோட் நீர்மின் நிலையம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் என்றும்,  கூடுதலாக ஜம்மு-காஷ்மீரை மின்சாரப் பற்றாக்குறையிலிருந்து உபரி மின்சாரத்தை உருவாக்கும் மாநிலமாக்கும் என்றும் கூறப்படுகிறது.பாகிஸ்தானுக்குள் நேரடியாகப் பாயும் செனாப் நதி, அந்நாட்டின் விவசாய உற்பத்திக்கு உயிர்நாடியாக உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், இந்தியா மின்சார உற்பத்தியைப் பெருக்குகிறது.. கூடவே, பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்துகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இந்தியா ஒரு துப்பாக்கி தோட்டாவைக் கூட இந்தியா பயன்படுத்தவில்லை. மாறாக, அதிரடி தண்ணீர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதை முற்றிலும் எதிர்பார்க்காத பாகிஸ்தானுக்கு இந்த முறையும் இந்தியாவிடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழி கிடையாது.