
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பகுத்தறிவு பேசுகிறோம் என கூறி இந்து மதத்தை மட்டும் குறிவைத்து விமர்சனங்கள் வைத்து வருபவர்கள் தான் திமுகவினர்.சமூகநீதி அரசு ஏன் வாய்க்கிழிய பேசும் முதல்வர் ஸ்டாலின் அரசு இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டார். அனால் மற்ற மதங்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.
இந்த நிலையில் தான் முருக பக்த்ர்கள்மாநாடு நடைபெறும்வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில்,தமிழக காவல் துறை அரசியல் சார்பின்றி, நடுநிலையுடன் செயல்படுமாறு உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன.அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 10 நாட்கள் முன்பிருந்து அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்புகள் அமைத்து வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு பரிசீலனையில் உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பாக சில கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளோம். அதற்கு, இப்போது வரை பதில் வரவில்லை. அந்த மனு மீது 9-ம் தேதிதான் முடிவெடுக்கப்படும். தற்போது அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாஜலபதி வாதிடும்போது, "மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து காலை, மாலையில் 2 மணி நேரம் வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க உள்ளோம். அதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் தயாராக உள்ளன. மாநாட்டு வளாகத்துக்கு வந்த போலீஸார் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கக்கூடாது என பணியாளர்களை மிரட்டியுள்ளனர்" என்றார்.
இதையடுத்து நீதிபதி, "முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது அனுமதி மறுப்பது ஏன்? அறுபடை வீடுகளின் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி மறுக்க போலீஸார் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.போலீஸார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்படக்கூடாது. மனு குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.