
Trending
24 special
அடுத்த பூகம்பம் கிளம்பியது.மின்சார கொள்முதலில் ரூ.11,212 கோடி... கோபாலபுர பேமிலி தலையில் இறக்கிய இடி! மொத்தமாக மாறிய களம்!
- by Web team
- June 13, 2025

தமிழகத்தில் லஞ்ச வழக்கில் சிக்கியவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவி செய்துவருவதாக” மின்வாரியத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. இந்த கண்டனம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும் என்பதுதான் தமிழகத்தின் யதார்த்தம்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை என்ற அடிப்படையில் ஆட்சி நடந்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடமிருந்து அவர்கள் குறிப்பிட்ட விலைப்புள்ளிகளை விட குறைந்த விலைக்கு மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாக அரசு கூறிக்கொள்ளும் போதிலும், வெளிச்சந்தையை விட அதிக விலை கொடுத்து தான் மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.இதுஒருபுறம் இருந்தால் அடுத்த பூதம் கிளம்பியுள்ளது.
''எஸ்.இ.பி.சி., நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறது. அந்நிறுவனம், மூலதன செலவை உயர்த்த கோரிய மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு வெளியிட்டு, கருத்து கேட்க வேண்டும்,'' என, தமிழக மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது : துாத்துக்குடியில், எஸ்.இ.பி.சி., பவர் நிறுவனம், 525 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அதனிடம் இருந்து அரசு மின்துறை மின்சாரம் வாங்கப்படுகிறது.கடந்த, 1998ல் எஸ்.இ.பி.சி., மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது. பின், ஒழுங்குமுறை ஆணையம், 2015ல் அனுமதி வழங்கியது.அதிகபட்ச முதலீடு, 3,514 கோடி ரூபாயை தாண்டக்கூடாது, 2018க்குள் மின் நிலையம் அமைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 2021ல் தான் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்நிறுவனம், கூடுதல் செலவு செய்துள்ளதாக கூறி, மூலதன செலவை, 3,249 கோடி ரூபாயில் இருந்து, 5,118 கோடி ரூபாய்க்கு உயர்த்தி வழங்க வேண்டும் என, மின் ஆணையத்திடம் மனு செய்துள்ளது.கூடுதலாக கேட்கும், 1,126 கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யவில்லை. செலவழிக்காத தொகையை செலவு செய்ததாக கூறி, மின் கொள்முதல் விலையையும் உயர்த்தும்படி கூறுகிறது.
மூலதன செலவான, 3,249 கோடி ரூபாயை, 5,118 கோடி ரூபாயாக உயர்த்தினால், அதில் நிலை கட்டணமாக உள்ள, 724 கோடி ரூபாய், 1,140 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஓராண்டிற்கு, 416 கோடி ரூபாய் கூடுதல் செலவு வீதம், கொள்முதல் காலமான 27 ஆண்டுகளுக்கு, 11,212 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும்.இந்த கொள்ளையை தடுக்காமல், ஒரு ஒழுங்கு கூட இல்லாமல் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது. இந்த கொள்ளை, மின்கட்டணமாக மக்கள் தலையில் தான் சுமத்தப்படும்.
இந்த நிலையில் மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார்.செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. மேலும் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது அமலாக்கத்துறை. தற்போது தான் இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோகக் கழகத்திற்கு எதிராக, டெல்லியில் உள்ள இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து அமல்ககத்துறை விரைவில் தமிழகம் விரையும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது.
Post Tags:
#Se senthil balaji
#senthil balaji latest news
#senthil balaji dmk
#senthil balaji assembly speech
#senthil balaji speech
#v senthil balaji
#senthil balaji press meet
#senthil balaji latest speech
#senthil balaji today press meet
#senthil balaji today assembly spee
#chco chennai
#court
#chennai high court
#supreme court
#high court
#karnataka high court
#chennai rainfall
#chennai highcourt
#heavy rainfall in chennai
##chennai
#chennai rain
#chennai news
#chennai mall
#chennai vada curry
#chennai rain alert
#chennai rains
#chennai me
Related News
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Don’t worry, we don’t spam