24 special

நாளை சித்திரை முழு நிலவு...தரமான சம்பவத்துக்கு நேரம் குறித்த மோகன் ஜி ..!

Mohan g
Mohan g

ருத்ர தாண்டவம்,  திரௌபதி உள்ளிட்ட படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் மோகன் ஜி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை நாளை அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.


அதிலும் குறிப்பாக  நாளை சித்திரை முழுநிலவு, எனவே அடுத்த படத்தின் பெயரை நாளை அறிவிக்க உள்ளேன் என பதிவிட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த திரைப்படத்தில்  இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், சதுரங்க வேட்டை நட்டி, உள்ளிட்டோர் தன்னுடைய படத்தயாரிப்பில் இணைந்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.


இப்படியான நிலையில் நாளை தன்னுடைய படத்தின் பெயரையும் அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மோகன் ஜியின் முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை.

தன்னுடைய முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதன் பின் எப்படிப்பட்ட படங்கள் மக்களை சென்றடைய  உண்மையான சம்பவங்களை தழுவியே படத்தை எடுத்தால் நிச்சயம் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்த மோகன் ஜி, திரௌபதி ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை எடுத்து பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

மேலும் இங்கே குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவரின் முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை இரண்டு வார்த்தைகளால் அமைந்தது. ஆனால் வெற்றிப் படங்களான திரௌபதி, ருத்ர தாண்டவம் ஒரு வார்த்தை கொண்டதாக இருந்தது. வெற்றியும் பெற்றது. இப்படி ஒரு நிலையில் நாளை அறிவிக்க உள்ள படத்தின் பெயர் ஒரு வார்த்தையாக இருக்குமா?

இரண்டு வார்த்தை கொண்டதாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கு முன்னதாக சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழணங்கு என குறிப்பிட்டு சிகப்பு கருப்பு என திமுக கலர் காம்பினேஷனில் ஒரு போட்டோவை பகிர அது தீயாய் பரவ, தமிழன்னை இப்படியா இருப்பாங்க என ...ஏ ஆர் ரகுமானை திட்டாதவர்களே இல்லை என்ற அளவிற்கு திட்டி தீர்த்து விட்டனர்.

அதன்பின் இயக்குனர் மோகன் ஜி தமிழன்னை என குறிப்பிட்டு அழகான ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட ஏ ஆர் ரஹ்மானுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே பதிவிட்டுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது என்பது கூடுதல் தகவல்.