
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்று ஊடகங்கள் அலறிக்கொண்டிருக்க, உண்மையில் இந்தியா ஒரு மிகப் பெரிய நிதி யுத்தத்தை அமைதியாக நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கப்படுகிறது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 200ஆக இருந்தாலும் இனி கவலையில்லை.. டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வர்த்தகம் விடுபட்டு வருகிறது.. மிகவிரைவில் டாலர் இல்லா வர்த்தகம் உலகம் முழுவதும் தொடங்கும்.. அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவசியம் இல்லாததாக மாறிவிடும்.. தொலைநோக்கி பார்வையில் மோடியின் இந்தியா பயணித்து வருகிறது.!
அண்மைக் காலமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்தும், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார போர் குறித்தும் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இதை வைத்து அரசியல் நகர்வுகளும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 680 முதல் 700 பில்லியன் டாலர் என்ற அளவில் நிலையாக இருப்பதை யாரும் பேச மறுத்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டே டாலர்களை சந்தையில் விற்பனை செய்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ரூபாயின் நகர்வை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதுதான். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; மாறாக உலகளாவிய புவிசார் அரசியலில் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு மிக நுணுக்கமான உத்தியாகும்.
அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் இந்தியாவுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயம், மருத்துவம் மற்றும் டிஜிட்டல் வரிவிதிப்பு போன்ற துறைகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், இந்தியா தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கக் கருவூல பத்திரங்களை இந்தியா பெருமளவில் குறைத்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 241 பில்லியன் டாலர்களாக இருந்த கருவூல பத்திரங்களின் மதிப்பு தற்போது 200 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க டாலரை நேரடியாக தாக்குவதற்கான முயற்சி அல்ல, மாறாக டாலரை சார்ந்திருப்பதை குறைத்து இந்தியாவின் பொருளாதார அபாயங்களை குறைப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.
இந்தியாவின் தற்போதைய மிக முக்கியமான நகர்வு தங்கம் வாங்குவதில் உள்ளது. நவம்பர் மாதத்தில் 815 மெட்ரிக் டன்னாக இருந்த தங்க கையிருப்பு தற்போது 880 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. தங்கம் என்பது எந்தவொரு நாடும் எளிதில் முடக்க முடியாத, போர்க்காலங்களில் கவசமாக செயல்படக்கூடிய ஒரு சொத்தாகும். இதன் மூலம் இந்தியா தன்னை “பொருளாதார தடைகள் ஊடுருவ முடியாத” ஒரு நாடாக மாற்றிக் கொள்ள முயல்கிறது.
தற்போது இந்தியா “நிதித் தேசியவாதத்தை” முன்னெடுக்கிறது. இதற்காக ஓமன், நைஜீரியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுடன் டாலர் அல்லாத வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தி வருகிறது. குறிப்பாக, ரஷ்யாவுடனான 95 சதவீத வர்த்தகம் தற்போது ரூபாய்-ரூபிள் மூலமாகவே நடைபெறுகிறது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளுடன் ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் அமைதியாக செய்யப்படுகின்றன.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளியையும் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டில் உலக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளியில் 25 சதவீதத்தை இந்தியா மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. இது தொழில்துறை மற்றும் முதலீட்டு ரீதியாக இந்தியாவின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்துகிறதுடாலரை தாக்காமல், அதே நேரத்தில் டாலரின் பிடியிலிருந்து தப்பித்து ஒரு மாற்று அமைப்பை உலக நாடுகளுக்கு, குறிப்பாக தெற்கு நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக காட்டுகிறது.
இறுதியாக, பிரித்தானியாவில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் சுமார் 200 மெட்ரிக் டன் தங்கத்தை மீட்டுக்கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.. உலக நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றாலும், அந்த வலியை கடந்து நிற்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்ற செய்தியை இந்த நிதிசார் நடவடிக்கைகள் வாஷிங்டனுக்கும் பிற உலக நாடுகளுக்கும் தெளிவாக உணர்த்துகின்றன.
