24 special

என்ன நடக்கிறது கள்ள குறிச்சியில் "பகிர்" கிளப்பிய அண்ணாமலை வழக்கு சிபிஐ வசம் செல்கிறதா?

Annamalai , cbi
Annamalai , cbi

பள்ளி மாணவி மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது குறிப்பாக இன்றைய தினம் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்ற மாணவர்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கலவரமாக மாறியுள்ளது.


குற்றம் சுமத்தப்பட்ட பள்ளி முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது, பள்ளியில் நிறுத்தப்பட்டு இருந்த பள்ளி வாகனங்கள் முழுமையாக எரிக்கப்பட்டு இருக்கின்றன, இந்த சூழலில்தான் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சியில் என்ன நடக்கிறது என்றும் டிஜிபி மீதும் குற்றம் சுமத்தி கேள்வி எழுப்பி இருக்கிறார் இது குறித்து அவர் எழுப்பிய கேள்வி பின்வருமாறு :-

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார், உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்,

மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது   நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.

மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க படுமா என்பதனை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.