24 special

அண்ணாமலை பெயரை சொல்லி கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர்... யார் அவர்?

Annamalai and bjp
Annamalai and bjp

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து விதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார், நிம்மதியாக ஒப்பந்தம் செய்யமுடியவில்லை தமிழகத்தில் நாம் ஆட்சியில் இருக்கிறோமா?இல்லை பாஜக இருக்கிறதா? என நேரடியாக முக்கிய 2 ம் நம்பர் புள்ளியிடம் புலம்பி தீர்த்து இருக்கிறாராம் அந்த அமைச்சர்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சியை நோக்கி அடிக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.. அதோடு ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால் அண்ணாமலை மறு நாள் கையில் பேப்பருடன் வந்து, எந்த அமைச்சர் குற்றசாட்டு வைத்தாரோ அவரை பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை வெய்யிட்டுகிறார்.

இதில் அதிகம் சிக்கியது அண்ணாமலையின் சொந்த ஊர்கார அமைச்சர்தான், இது ஒருபுறம் என்றால் 24 மணி நேரத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தார் ஆர்எஸ் பாரதி ஆனால் தற்போது 180 மணி நேரம் கடந்தும் அமைதியாக இருக்கிறது திமுக.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த தேர்தலுக்கு அதிகமாக செலவு செய்துள்ளோம், ஆனால் தற்போதைய சூழலில் எதிலும் முறையாக வருமானம் இல்லை, நீதிமன்றம் ஒரு வழியில் பார் டெண்டர் குறித்து உத்தரவு போட்டு இடைஞ்சல் கொடுக்கிறது என்றால் அண்ணாமலை எங்கு என்ன செய்தாலும் மோப்பம் புடித்து விடுகிறார்.

எனது துறையை சேர்ந்த IAS அதிகாரிகள் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணாமலையை அடக்கி வைக்கவிட்டால் 2024-ற்குள் மிகப்பெரிய பின்னடைவை கட்சி சந்திக்கும் குறிப்பாக நாம் சந்திப்போம் என கண்ணீர் விட்டு புலம்பிவிட்டு சென்று இருக்கிறாராம் அந்த அமைச்சர்.அண்ணாமலை போட்ட போடு தற்போது அமைச்சர்களே கண்ணீர்விட்டு கதறும் சூழல் உண்டாகியுள்ளது.