24 special

OPS ஆதரவாளருக்கு செம்ம அடி உதை..! பயங்கர பதற்றத்தில் அதிமுக தலைமை அலுவலகம்..!

Edappadi and o pannerselvam
Edappadi and o pannerselvam

அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற இருக்கும் நிலையில் 9:00 மணிக்கு தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் தலைமை இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம் பூட்டு போடப்பட்டு இருக்கின்றது. இருந்தாலும் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய இல்லத்தில் இருந்து தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டு செல்கிறார்.


அதே வேளையில் ஓபிஎஸ் ஆதரவாளருக்கு அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அடி உதை கொடுத்து உள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் யார் வந்தாலும் அங்கிருந்து துரத்தி அடித்து விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் இப்படியான நிலையில் ஓபிஎஸ் வருகையையொட்டி இபிஎஸ் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

தலைமை அலுவலகம் பூட்டு போடுவதற்கான காரணமாக இன்று பொதுக்குழுவில் ஒருமனதாக இபிஎஸ்ஐ பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அலுவலகம் திறந்து அனைவருக்கும் இனிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாம்.

இப்படியான சமயத்தில், தற்போது OPS EPS ஆதரவாளர்கள் மாறி மாறி கற்களை வீசி சண்டையிட்டு  வருகின்றனர். பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டு உள்ளது.