24 special

கோலிவுட்டை குறிவைத்து களமிறங்கிய சிறப்பு குழு.! சிக்கியது ஆதாரம்! கோபாலபுர தலையில் பேரிடியை இறக்கிய டெல்லி!

UDHAYANIDHISTALIN,NIA
UDHAYANIDHISTALIN,NIA

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே தீவிரவாத திட்டத்துக்கு சதித்திட்டம் தீட்டுவது, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு அங்குள்ள அரபி கல்லூரியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.


இதுதொடர்பாக என்ஐஏ, அரபி கல்லூரியில் சோதனை  நடத்தி தனி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷா, இர்ஷத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது உசைன் ஆகிய 4 பேரை என்ஐஏ கைது செய்திருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் அகமத் அலி, ஜவகர் சாதிக், ராஜா அப்துல்லா, ஷேக் தாவூத் ஆகிய 4 பேரை என்ஐஏ நேற்று இரவு கைது செய்துள்ளது. இதில் அகமது அலி அரபிக் கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்தவர் ஆவார். அவர்களிடம் கோவை காவலர் பயிற்சி மையமான பிஆர்எஸ் வளாகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இதற்கிடையே தி.மு.க.,வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவராக செயல்பட்ட இவரையும் இவரின் தம்பியையும் கைது  செய்தது மத்திய போதை தடுப்பு பிரிவு. சுமார் 2000 கோடி மதிப்பில் போதைப்பொருள் கடத்தியுள்ளான் ஜாபர் சாதிக். அதில் சம்பாத்தித்த பணத்தை தமிழ் திரைப்படங்கள் தயாரித்தார்

மேலும்  ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கி கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கி கணக்குளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ.எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.என்ற செய்திகள் வெளிவந்துள்ளது

இதற்கிடையே  தான் கோவையில் உள்ள அரபிக்கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது.இதுதொடர்பாக, அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்கையும்  ஆய்வு செய்ததில் சில பண பரிவர்த்தனைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன . அதுபற்றிய விபரத்தை, டில்லியைச் சேர்ந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்.ஐ.ஏ  அதிகாரிகள்

இதனை தொடர்ந்து  அவர்கள் தற்போது போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் இருக்கும் , ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் அவரது சகோதரர்கள்  ஆகியோரின் வங்கி கணக்குளை ஆய்வு செய்து, பண பரிவர்த்தனை குறித்து என்.ஐ.ஏ  கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக்கல்லுாரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுத பயிற்சி அளிக்க நிதியுதவி செய்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் அரபி கல்லூரி முதல்வரை தட்டி தூக்கியுள்ளது. என்.ஐ.ஏ இது ஜாபர் சாதிக் மற்றும் கோடம்பாக்கம் திரை உலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.