24 special

மாறன் குடும்பத்தில் பிளவு? புது விஞ்ஞான ஊழலா? கோபாலபாரத்தில் இறங்கிய பேரிடி! டெல்லியில் முகாமிட்ட கலாநிதி ! மொத்தமாக விழுந்த ஆப்பு.

KALANITHIMARAN,THAYANITHIMARAN
KALANITHIMARAN,THAYANITHIMARAN

 முரசொலி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன் குழுமத்திற்குள் பூசல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த விஷ்யம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தற்போது சபரீசன் போன்று கருணாநிதி காலத்தில் முரசொலி மாறனும் அவரது மகன் கலாநிதி மாறனும் செயல்பட்டு வந்தார்கள். குறிப்பாக 1996ல்  கருணாநிதி வெற்றி பெற முக்கிய காரணம் சன்டிவி தான். அதை நிர்வகித்த கலாநிதி தான். அதற்கு பரிசாக தான் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு எம்.பி பதவி,அமைச்சர் பதவி என வழங்கப்ட்டது.


இதற்கிடையே சபரீசன் உள்ளே வந்த கலாநிதி மாறன் ஒத்துக்கப்பட்டார். இந்த நிலையில் தான் திமுக தற்போது பல சிக்கி உள்ளது  இதற்கு காரணம் மாப்பிள்ளை மற்றும் வாரிசு தான் என கலாநிதி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தயாநிதியை கொம்பு சீவியுள்ளது. கோபாலபுரம் இந்த நிலையில் தான் மேலும் தயாநிதி மீது ஏற்கனவே ஊழல் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.ஒரு வேளை வழக்கு சூடுபிடித்தால் கோபாலபுர குடும்பமும் சிக்கும் என்பதால் சொத்து பிரச்சனையை உண்டாக்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நோட்டீஸில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:

ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, மோசடி நடவடிக்கை மேற்கொண்டு, இதற்காக திட்டம் தீட்டி, ஏமாற்று வழிகளில் கலாநிதி சதி செய்து உள்ளார் குடும்பத்தின் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, குறிப்பாக முரசொலி மாறன் மரணப் படுக்கையில் இருந்தபோது, 2003ல் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

தந்தையின் மரணத்துக்குப் பின், உரிய சட்ட ஆவணங்கள் இன்றி, தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டன

இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் சில மாதங்களுக்குப் பிறகே வெளியான நிலையில், அதற்கு முன்பே சொத்துக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன

பின்னர் நிறுவனப் பங்குகளை கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக் கொள்ள இது உதவியாக அமைந்தது செப்டம்பர் 2003ல், 12 லட்சம் பங்குகள் சட்டவிரோதமாக, நம்பிக்கை துரோகம் செய்து மாற்றப்பட்டன.சன் டிவியின் 60 சதவீத பங்குகள், நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களின் எந்தவித ஆலோசனை, ஒப்புதல் இன்றி கலாநிதி பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 அந்த நேரத்தில் சன் டிவி நிறுவன நிதிநிலை வலிமையாக இருந்தபோது, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அவசியம் எழவில்லை.அதற்கு முன்பு வரை கலாநிதியிடம் பங்குகள் இல்லாத நிலையில், பங்குகள் மாற்றத்துக்குப் பின் ஐ.பி.ஓ., வெளியிடப்பட்டது.இதன் வாயிலாக, நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளராக கலாநிதி மாறியதால், குடும்பத்தின் பங்கு 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமானது.

கம்பெனிகள் சட்டத்தின்கீழ் இவை தீவிர குற்றங்கள் என்பதால், அரசின் தீவிர குற்ற விசாரணை அலுவலகமான எஸ்.எப்.ஐ.ஓ.,வின் விசாரணை கேட்கப்படலாம்.முன்கூட்டியே 12 லட்சம் பங்குகளை தன்வசப்படுத்தியதால், பின்னாளில் பங்கு மதிப்பு 3,500 கோடி ரூபாயாக உயர்வு. 12 லட்சம் பங்குகளுக்கு முகமதிப்பு 10 ரூபாய் என, 1.20 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள 3,498.80 கோடி ரூபாய் நிதி மோசடியாக கருதப்பட வேண்டியுள்ளது.

சன் டிவி நிறுவனம் ஆரம்பத்தில் மாறன் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. ஆனால், காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களிடையே பங்கு வைத்திருப்பது மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டுள்ளன,  இந்த மோதல்கள் தற்போது சட்டரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினை மாறன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், திமுகவிற்கும் அரசியல் ரீதியாக உள்ள தாக்கத்தை ஏற்படுத்தலாம்.இதற்கு முன்பாகவும், கடந்த 2024, அக்., 7ம் தேதி, கலாநிதி மாறனுக்கு முதலாவது நோட்டீஸை தயாநிதி மாறன் அனுப்பியதாக தெரிகிறது

மேலும் டெல்லியில் முகாமிட்டு பல விஐபி களை சந்தித்து வருகிறாராம். விரைவில் திமுக தலையில் பேரிடியை இறக்கவுள்ளார் கலாநிதி..