24 special

இந்தியாவை அழிக்கும் AIMIM..! எம்பி பகிரங்க குற்றசாட்டு..!


உத்திரபிரதேசம் : இந்திய மஜ்லிஸ்-இ- இத்தேஹாதுல்- முஸ்லீம் கட்சியின் நிறுவனரும் எம்பியுமான அசாதுதீன் ஒவைஸி முகம்மது அலி ஜின்னா போல நடந்துகொள்கிறார் என கூறியதுடன் அவர் இந்தியாவை மீண்டும் பிரிக்க நினைக்கிறார் என பிஜேபி எம்பி ஒருவர் கூறியிருப்பது சலசலப்பை உருவாக்கியுள்ளது. மேலும் அசாதுதீன் குழப்பங்களை விளைவித்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிஜேபி ராஜ்யசபா எம்பியான ஹ்ரநாத்சிங் யாதவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில் " இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் முகம்மது அலி ஜின்னா செய்த அதே வேலையை அசாதுதீன் ஓவைஸி செய்துவருகிறார். ஜின்னா நாட்டை அழிக்க செய்த அதேவேலையை அசாதுதீன் நன்கு திட்டமிட்டு செய்துவருகிறார்.

ஒவைசியின் அணுகுமுறைகளையும் அவரின் செயல்பாடுகளையும் இந்திய மக்கள் எப்போதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் தவறான செயல்களை அனுமதிக்கமாட்டார்கள். திரு.ஒவைஸி இஸ்லாமிய சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்சிசெய்து வருகிறார். நாட்டை பிரிக்கும் செயல்களை ஒவைசி நிறுத்தவில்லையெனில் அவரது மீதிக்காலங்களை சிறையில் கழிக்க நேரிடும்" என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்க்கு ஒருநாள் முன்பு ஒவைசி பிரதம மோடியை கிண்டலடித்திருந்தார். ஒவைசி " பெட்ரோல் உட்பட எரிபொருள் விலை உயர காரணம் முகலாயர்களே. பணவீக்கத்துக்கு அக்பர் பொறுப்பேற்பார். வேலையில்லாத்திண்டாட்டத்திற்கு ஷாஜகான் தன காரணம். இதை நான் நம்புகிறேன். இந்த பொறுப்புகள் அனைத்தும் முகலாயர்கள் மீதே விழுகிறது. பிரதமர் இதற்கு பொறுப்பேற்கமாட்டார்" என பிரதமரை கிண்டலடித்திருந்தார்.