24 special

கற்பனைக்கு எட்டாத ஒரு தாக்குதல் ...பெரும் அடி கொடுத்த இந்தியா... ஓடி வந்த பாகிஸ்தான் அதிகாரிகள்.. தலைகீழாக மாறிய சம்பவம்!

pmmodi , pakisthan
pmmodi , pakisthan

பஹல்காம் தீவிரவாதிகள் தக்குதல்களை தொடர்ந்து  இந்தியாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் நடுநிலை விசாரணைக்கு தயார் என கீழே இறங்கியுள்ளது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானிடம் அடி வாங்கி பாகிஸ்தான் ராணுவம் பின்னோக்கி ஓடியது   மற்றொரு புறம்  பலுசிஸ்தானிடம் அடி வாங்கியுள்ளது  பாகிஸ்தான் ராணுவம் .தற்போது இந்தியா கொடுத்தாள்ள  பதிலடி கத்தியின்றி ரத்தமின்றி கற்பனைக்கு எட்டாத ஒரு தாக்குதலை இந்தியா செய்துள்ளது இந்த தாக்குதல் தான் தற்போது உலகம் முழுவதும் பேச்சாக உள்ளது. 


ஆமாம்  இந்தியா பாகிஸ்தான் மீது தண்ணீர்ப் போரை கட்டவிழ்த்துவிட்டதா?இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும்  ஜீலம் நதியில்  நீரை திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நதி திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்து ஓடுவதால் பாகிஸ்தான்  முசாபராபாத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகோதி எல்லையிலிருந்து முசாபராபாத் நகரம் வரை, ஆற்றில் தண்ணீர் வேகமாகப் பெருகுவதை உள்ளூர்வாசிகள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை கனவிலும் பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... என காஷ்மீரின் அழகை கண்டு அனைவரும் வியப்படைகின்றனர்.

இயற்கையின் பேரழகு எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் காஷ்மீர், பல ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  தற்போது தான், மெல்ல, மெல்ல மீண்டு வந்தது.மோடி அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பயங்கரவாத சுவடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மாய்ந்து வந்தன. அனந்த்நாக் மாவட்டத்தில், பனிமலையும், பசுமை போர்த்திய இயற்கை சூழலையும் கொண்ட பஹல்காம், ஜம்மு - காஷ்மீரின் மிகச் சிறந்த கோடை வாசஸ்தலங்களில் ஒன்று; கலாசார, பாரம்பரிய பெருமை கொண்ட நகரம். ஹிந்துக்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என ஏங்கும், அமர்நாத் குகை கோவில் செல்லும் வழித்தடத்தில், இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

இதற்கிடையே  பஹல்காம் பனிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பைசாரன் புல்வெளியில், கடந்த  22ம் தேதி, பாக் கைக்கூலிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.\து இரு நாடுகளுக்கு இடையேயான, காலம் காலமான பகையின் பரிணாம மோதல். 1947ம் ஆண்டு, சிலரின் அரசியல் கனவுகளுக்காக இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தினர். அதன் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், நாட்டு மக்களை மத ரீதியாக பிளவு படுத்த பயங்கரவாதிகளை கருவியாக பயன்படுத்தி, ஏவி விட்டுள்ளது, நமது அண்டை நாடான பாகிஸ்தான்.சுற்றுலா பயணியரின் பெயரை கேட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் கொடூரம், இங்கு அரங்கேறியுள்ளது. மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் இந்த பயங்கரவாதத்தின் தாக்கம், பஹல்காம் மட்டுமல்ல, பல நாட்டு எல்லைகளை தாண்டி எதிரொலிக்கும். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்ட தருணம்; அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்த தருணம் என, துல்லிய நேரத்தை கணக்கிட்டு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர் சூளுரை எதுவும் விடுக்காமல், பயங்கரவாத பாகிஸ்தானின் ஆணி வேரையே அறுத்தெறியும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா அறிவித்துள்ள தடைகள், போரை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. முதலாவதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு நிகரானது. 'தண்ணீரும், ரத்தமும் ஒரே நேரத்தில் பாய்ந்தோடுவதை அனுமதிக்க முடியாது' என பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அது தற்போது இந்தியா உலகுக்கு சொல்லும் செய்தியாக அமைந்துள்ளது.இரு நாடுகள் இடையே பல போர்கள், மோதல்கள் நடந்தபோதும் தாக்குப்பிடித்த இந்த ஒப்பந்தம், தற்போது முதல் முறையாக மோடி அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமையும். காரணம், சிந்து நதி தண்ணீரையே பாகிஸ்தான் முழுக்க, முழுக்க தனது விவசாய மற்றும் தொழில் தேவைகளுக்காக நம்பியுள்ளது.