24 special

கடைசி பந்தில் "சிக்ஸர்" அடித்த அண்ணாமலை...! யாராக இருக்கும் அந்த நபர்?

Annamalai and Stalin
Annamalai and Stalin

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் நடைபெற்றது, தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் 


தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம் குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல் பூரண மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொடரும் லாக்அப் மரணங்களை கண்டித்தும் இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாஜகவின் பல்வேறு தலைவர்கள் பேசிய நிலையில் இறுதியாக அண்ணாமலை தனது பேச்சினை தொடர்ந்தார், அப்போது அவரது வழக்கமான பாணியில் ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்தார் அண்ணாமலை, அவரது பேச்சிற்கு இடையில் தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே  இருக்கிறார் எனவும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர் வெளியேறுவார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது, அண்ணாமலை கூறிய நபர் யார்? யார் அண்ணாமலையிடம் தொடர்பில் இருப்பது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இன்றைய பாஜகவின் இறுதி பேச்சில் அதிரடியாக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார் அண்ணாமலை.