24 special

அண்ணாமலைக்கே மிரட்டலா? அதே மேடையில் ஊழல் பட்டியலை வெளியிடுகிறோம்..! நாராயணன் திருப்பதி அதிரடி..!

Narayan tirupathi , geetha jeevan
Narayan tirupathi , geetha jeevan

சூடு, சொரணை இருந்தால்,  தைரியம் இருந்தால் பாஜக தலைவர்கள் பேசும் மேடை ஏறி பாருங்கள்  என்று சவால் விட்டு இருக்கிறார் பாஜக துணைத் தலைவரான  நாராயணன் திருப்பதி.


பாஜக தலைவர்களையோ அல்லது பாஜகவையோ, எதிர்க்கட்சியினர் விமர்சித்தினால் அதற்கு உடனே பதிலடியாக நையாண்டியாக சோசியல் மீடியாவிலும், ஊடகங்களிலும் பதில் சொல்பவர் நாராயணன் திருப்பதி.

உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பதவி ஏற்ற பொழுது இந்திய அரசின் பெயரால் என்று கூறியதற்கு ஏன் ஒன்றிய அரசு என்று கூறவில்லை. ஒன்றிய அரசு என்று சொல்லி இருந்தால் தெரியும் என்று என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியதிற்க்கு.

திமுகவின் டாக்டர் செந்தில் குமார். பாஜகவில் யாருக்குமே அறிவு கிடையாதா? சரி நான் மூன்றாம் வகுப்பு பாடம் எடுக்கிறேன். நமது நாட்டின் பெயர் இந்தியா , மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்றும் யூனியன் கவர்மெண்ட் என்றால் ஒன்றிய அரசு, ஸ்டேட் கவர்மெண்ட் என்றால் மாநில அரசு அதனால் மிஸ்டர் நாராயணா நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்பு என்றும். புரியுதா சரி என்று கூறியதற்கு பதிலடியாக உடனே தன் பாணியில் நையாண்டியாக நாராயணன் திருப்பதி , செந்தில்குமார் போட்ட பதிவில் பல எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டி என்ன செய்வது ஆங்கிலேயே அடிவருடிகள் கூகுள் ட்ரான்ஸ்லேட் தமிழ் கற்றுக் கொண்டால் தமிழ் அறிவு வளராது தான். மீண்டும் ஒன்றாம் வகுப்பு படித்துவிட்டு வரவும் யூனியன் என்றால் என்ன ஸ்டேட் என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன் என்றும். 

தமிழக அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம்" என்று மிரட்டல் விட்டிருந்தார்.  

அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு ஆளும் கட்சியும், அமைச்சர்களும் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்.

ஏற்கனவே, சில அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டு கொள்ளாத தமிழக அரசு, காவல்துறை மற்றும் தமிழக முதலமைச்சர், பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம் காப்பது முறையல்ல. 

சட்டம்ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே, கடமை தவறி  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சி தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்.

மேலும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலை அவர்களை மிரட்டினாரோ,  நான் அதே இடத்தில் தமிழக பாஜக பொது நடத்தும் கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், முறைகேடுகள் குறித்தும், தி மு கவின் அராஜகம் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன்., அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்தைகளின் படி, தி மு க வினருக்கு  சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். தி மு க ஆண்டு கொண்டிருப்பது தமிழக மாநிலத்தை. ஆனால், பாஜக ஆள்வது  இந்திய நாட்டை என்பதை தி மு க வினர் மறந்து விட வேண்டாம் என்று காட்டமாக நாராயணன் திருப்பதி கூறியிருக்கிறார்.