24 special

#BREAKING புதுச்சேரியில் நடந்தது மோதல் கைது செய்யப்படுகிறாரா ஆ.ராசா? நினைத்தது நடந்தது!

A rasa
A rasa

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா தனது பொறுப்பை மறந்து மேற்கோள் காட்டி பேசிய சம்பவம் தற்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு போலீசார் மண்டை உடையும் சூழலை உண்டாக்கி இருக்கிறது, ஆ. ராசாவிற்கு ஆதரவாக மனு தர்ம நூலை புதுவையில் பெரியார் திராவிட கழகம் என்னும் அமைப்பினர் எரிக்க போவதாக தகவல் வெளியானது.


இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவிய இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர், ஒரு கட்டத்தில் ஆளும் பாஜகவினர் குவிய பெரியார் திராவிட கழகத்தினர் பாதி பேர் ஓட்டம் எடுத்தனர், இந்த மோதலில் இரு போலீசாரின் மண்டை உடைந்தது.

ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சையை உண்டாக்கும் விதமாக பேசிய பேச்சுக்கள் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்கி இருக்கிறது,  ஆ.ராசா பேசிய பேச்சுக்கள் கலவரத்தை உண்டாக்கும் அவரை திமுக அரசு கைது செய்யவேண்டும் என பாஜகவினர் கூறிவந்த நிலையில் அது நடந்தே விட்டது, இனியும் ஆ.ராசாவை கைது செய்யவில்லை என்றால் அது இருதரப்பினர் இடையே பெரும் மோதலை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

உடனடியாக ராசாவை கைது செய்யவேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர், இனியும் தமிழக அரசு ராசாவை கைது செய்யாமல் விட்டு வைத்து இருந்தால் இன்று அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏற்பட்ட மோதல் நாளை தமிழகத்திலும் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது .

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது..!