Cinema

தமிழ் சினிமாவில் ஓங்குகிறது சங்கிகள் கை... அடிச்சான் பாரு அப்பொய்ன்மெண்ட் ஆர்டரு...!

Karthik, maniradnam
Karthik, maniradnam

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இந்து மதத்தை விமர்சனம் செய்யும் திரைப்படங்கள் வெளியாகும் அதனை சமூக சீர்திருத்த படங்கள் என சிலர் கொண்டாடுவது உண்டு ஆனால் அது தற்போது தலை கீழாக மாறி இருக்கிறது, இந்துக்கள் பார்வையை கூறும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றியை குவிக்க தொடங்கி உள்ளனர்.


இந்த சூழலில் கடந்த 7 ம் தேதி தமிழகத்தில் TNNEWS24 முதன் முதலில் செய்தி ஒன்றை சுட்டிக்காட்டியது சமூக வலைதளத்தில் சரவணபிரசாத் என்பவர் பொன்னியின் செல்வன் ட்ரைலரில் நடைபெற்ற கிரிப்டோ வேலையை TNNEWS24 சுட்டிக்காட்டியது, அது தற்போது இந்திய அளவில் எதிரொலிக்க படக்குழு அதிர்ந்து போய் உண்மையை சொல்லியுள்ளது.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரை வண்டியில் செல்லும் போது அம்புகளால் தாக்கப்பட பொன்னியின் செல்வன் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட ட்ரெய்லர்களில் நாராயணா என்று ஆழ்வார்க்கடியான் சொல்கிறார். அதே நேரத்தில் தமிழ் ட்ரெய்லரில்  ஐயயோ என்கிறார்.

தமிழ் மன்னர்களை பற்றிய படங்களை எடுக்கும் போது முக்கியமாக தமிழ் மண்ணில் அவர்கள் எந்தளவு சனாதான தர்மத்தை கடைபிடித்தார்கள் என்பதை காட்டாமல் மறைத்து மதமாற்றத்துக்கு உதவுகிறாரா மணிரத்தினம் என்ற கேள்வி எழுந்தது? இதனை முதன் முதலில் சுட்டிக்காட்டியது TNNEWS24 அதன் பிறகு சமூக வலைத்தளங்களிலும் மற்றும் பிரபல பத்திரிகையாளர் பாண்டே உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டனர்.

இந்த சூழலில் மணிரத்தினத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் நேரடியாக ஏன் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ட்ரைலர்கள் நாராயணா என இருக்கிறது தமிழில் மட்டும் ஐயையோ என வைத்து இருக்கிறீர்கள் என கேட்க ஒரு நிமிடம் அதிர்ந்து போன மணிரத்தினம் படத்தில் முழுவதும் நாராயணா என்றுதான் வரும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி திரை உலகே இந்துக்கள் எதிர்பால் முடங்கி போயிருக்கிறது, பாலிவுட் திரைப்படங்களை இந்துக்கள் புறக்கணிக்க சினிமா தியேட்டர்கள் காற்றாடுகின்றன, அதே நிலைமை மணிரத்தினதின் பொன்னியின் செல்வன் படத்திற்கும் வரலாம் என்பதால் முன்கூட்டியே படக்குழு சர்ச்சையில் சிக்காமல் இருக்க தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

இந்தி சினிமாவை போல் தமிழ் சினிமாவிலும் சங்கிகள் கை ஓங்கி இருப்பதன் வெளிப்பாடே மணிரத்தினத்தின் ஐயையோ வெளிப்பாடு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.