
திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பு இன்றும் இருந்து வருகிறது. 1996-ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றமும் குன்றில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன் பின்னரும் கூட இந்து சமய அறநிலையத் துறை, தீபத் தூனில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்து அமைப்பினர், 'மலையில் ஆடு, கோழிகளை பலி கொடுக்கக் கூடாது' எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சிக்கந்தர் தர்காவில் விழா நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய ஜமா அத் நிர்வாகிகள் அறிவித்தனர். இதனை அறிந்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி, புதன்கிழமை (ஜனவரி 22) திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு நடத்தச் சென்றார். அதனை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான பதிவு ஒன்றையும் நவாஸ்கனி வெளியிட்டார் அதில் உள்ள ஒரு படத்தில் மலையில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து மூன்று பேர் பிரியாணி சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இது இந்துக்களின் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த்தனர் இந்துக்கள்.
இதனிடையே மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடந்த பல லட்சம் மக்கள் கலந்து கொண்ட முருகன் மாநாட்டில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலையை காக்க வேண்டும். தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம் பெற்றது.
முதல் தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் 2வது தீர்மானம்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்.3வது தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்
4வது தீர்மானம்: தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். 5வது தீர்மானம்: தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.6வது தீர்மானம்: சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் என்று மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த மாநாடு மூலமாக பாஜகவுக்கு பெரிய அளவில் எந்தவித மமுன்னேற்றமும் கிடைக்காது என்று அரசியல் தலைவர்கள் கூறிவந்த நிலையில் மதுரையில் முருக பகதர்கள் மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துளார்கள் மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது. திருப்பரங்குன்ற மலையை சிக்கந்தர் மலை என் கூறிய திமுக அரசுக்கு முதல் அடி இந்த மாநாட்டு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோர்ட் உத்தரவை மதிக்காத அரசு மீது மீண்டும் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளார்கள் இந்து அமைப்பினர். அதில் தீபத் தூனில் தீபம் ஏற்றிவிட்டால் அடுத்த முறை கண்டிப்பாக திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.அடுத்த தேர்தலில் வா ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில் உள்ளது பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் .