
பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்திய முருகன் மாநாடு தமிழக அரசியல் களத்தையே மாற்றி போட்டுள்ளது. மேலும் மதுரையில் இந்த மாநாடு நடத்தப்படுவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.மதுரை மக்களின் உணர்வுகளை இந்த மாநாடு பிரதிபலித்துள்ளது; குறிப்பாக திருப்பரங்குன்ற மலையை காக்க மதுரை மக்கள் திரண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தியுள்ளது முருக பக்தர்கள் மாநாடு. இது ஒருபுறம் என்றால் தமிழக பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் பதவியேற்று இரண்டாவது மாதத்தில் மதுரையில் நடக்கும் இரண்டாவது மாநாடு ஆகும் இது.
முதலில் அமித் ஷா அவர்களின் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தற்போது மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாடு மூலமாக பாஜகவுக்கு எந்த வித முன்னேற்றமும் கிடைக்காது என்று திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் புலம்பி தவித்தார்கள் . இந்த நிலையில் முருக பக்தர்கள் கூட்டத்தை பார்த்து தூக்கமே இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முருகன் மாநாடு நடத்தப்படுவதற்கு மதுரை தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் காரணம்திருப்பரங்குன்ற மலையை மீட்பது இதன் அடிப்படையில் தான் அவர்களது மேடையில் திருப்பரங்குன்ற மலை போன்று மேடை அமைக்கப்பட்டது.இது இந்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் பிறந்த நாள் காணமால் போனது. எங்கு பார்த்தாலும் முருகர் பக்தர் மாநாடு பற்றி தான் பேச்சு.
தென் தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது மாநாடு. அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் முக்கியத்துவம் பெற்ற நிலையில், முருகன் மாநாடு நடத்தப்படுவது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.தமிழகத்தில் முருகன் பக்தி என்பது அனைவருக்கும் அதிக ஈடுபாடு இருக்கிறது. ஏற்கனவே மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரம் சில மாதங்களுக்கு முன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மறைவுக்கு பின் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் பல்வேறு பிரிவுகளாக சிதறி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு பக்கமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பக்கம் இருக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதனை அதிமுக கண்கூடாக கண்டு உணர்ந்தது.
கடந்த தேர்தலில் தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் தான் நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இது தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆளும் தேசிய கட்சியின் மாநிலதலைவராக நியமிக்கப்பட்ட முக்குலோத்தோரில் ஒருவரை நியமனம் செய்தது பேசுபொருளானது. முக்குலத்தோர் மத்தியில் பாஜகவின் மீதான பார்வையும், பிரதமர் மோடி மீதான பார்வையும் சாதகமாக மாறியுள்ளது. மேலும் திமுகவில் பெரிதளவில் முக்குலத்தோர் சமூகத்திற்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பாலு வை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணி பக்கம் கொண்டுவர இந்த முருகன் மாநாடு கைகொடுத்துள்ளது. மதுரையில் செளராஷ்டிரா சமூக வாக்குகளையும் முழுமையாக அறுவடை செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் பாஜக முருகன் மாநாடு மூலமாக தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை அமித்ஷா வந்த போதே, முருகன் மாநாடு குறித்து பேசி இருந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் முருகன் மாநாட்டிற்கு வந்திருப்பதால், அடுத்தக்கட்ட பணிகளில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தும் என்று பார்க்கப்படுகிறது.