24 special

முடி கொட்டுற பிரச்சனை இருக்கிறதா?? அப்போ இந்த டிப்ஸ்-அ பாலோ பண்ணுங்க!!

HAIR
HAIR

முன்பெல்லாம் இயற்கையாகவே அனைவருக்கும் முடியின் வளர்ச்சி என்பது அதிகமாகவே இருந்து வந்தது. பொதுவாக அவர்கள் தேங்காய் எண்ணெய் மட்டும் தேய்த்து தினசரி தலையை சீவி பராமரிப்பார்கள். மேலும் வாரம்  ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தலையில் எண்ணெய் தேய்த்து இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து வருவார்கள். இவ்வாறு இயற்கையான முறையை பின்பற்றி தலையில் உள்ள முடியை பராமரித்து வந்தவர்களுக்கு அப்போதெல்லாம் முடி கொட்டும் பிரச்சனை என்பதே இல்லாமல் இருக்கும். மேலும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளும் முடி அதிகமாக கொட்டாமல் இருப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனா இன்றைய காலங்களில் மாடன் என்று கூறி இயற்கையாகவே இருக்கும் முடியினை கெடுத்துக் கொள்கின்றனர். பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று ஹேர் ஸ்டைல் செய்வது என்ற பெயரில் பலவிதமான கெமிக்கல் கலந்த பொருட்களை முடியில் பயன்படுத்தி அவர்களாகவே அவர்களின் முடியும் வளர்ச்சியை கெடுத்துக் கொள்கின்றனர்.


அடிக்கடி முடியினை கட் செய்து கொள்வது, ஷாம்பு போன்ற செயற்கையாக தயாரிக்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது, மேலும் வெறும் ஷாம்பு மட்டுமல்லாமல் கண்டிஷனர் போன்ற பல விதமான முடியினை பாதிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி இதையெல்லாம் பயன்படுத்தினால் தான் முடி மிகவும் அழகாகவும், சைனிக் ஆகவும் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் அனைவரும் தொடர்ந்து இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் எந்தவித பொருட்களையுமே பயன்படுத்தாமல் முடியின் மீது எந்த ஒரு அக்கறையுமே இல்லாமல் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. மேலும் சிலர் தலைக்கு எண்ணெய் வைப்பதை கூட மிகவும் பெரிய வேலை என்று நினைத்து செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் சிலருக்கு உடலில் ஏதேனும் சத்து குறைபாடினால் மிகவும் சிறிய வயதிலேயே அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுவது, நரைமுடி ஏற்படுவது போன்ற பல பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் இதனை தடுப்பதற்கு வழிமுறைகளை தேடி பலரும் ஓய்ந்து போய் உள்ளனர்.

மேலும் சிலர் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை செய்து முடி எப்படியாவது வளர வைத்து விட வேண்டும் என்று நினைத்து பல வழிமுறைகளை பின்பற்றி சில பொருட்களை தயாரித்து அதனை தலையில் தேய்த்து முடி வளர வைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு பல முயற்சிகள் செய்தும் முடி வளராமல் சிலர் தோல்வியடைந்து முடி இல்லை என்ற மன கஷ்டத்திலேயே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், உதிர்ந்த முடியை திரும்ப பெறவும் சூப்பரான டிப்ஸ் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த டிப்ஸ் என்னவென்றால்...தேவையான அளவிற்கு எண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு போன்றவற்றை சேர்த்து இதனை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அதன் மீது இந்த எண்ணெய் மற்றும் வெங்காய பூண்டு கலந்த கிண்ணத்தினை வைத்து 15 நிமிடம் டபுள் பாய்லிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு அதனை வடிகட்டி அந்த எண்ணையை தலையில் வாரத்திற்கு மூன்று முறை தேய்த்து வந்தால் தலையில் ரத்த ஓட்டம் சீராகும் என்றும், பொடுகு பிரச்சனை இல்லாமல் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும் என்று இந்த வீடியோவில் கூறியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி ட்ரை பண்ணி பாருங்கள்!!