24 special

ஆப்பிள் பழத்தில் இப்படி ஒரு கலப்படமா!! பின்னணியில் உள்ள உண்மை!!

APPLE
APPLE

இன்றைய உலகத்தில் நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலுமே கலப்படம் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது. வீட்டின் பயன்பாட்டிற்காக வாங்கும்  பொருள்களில் தொடங்கி உண்ணும் உணவுப் பொருட்கள் வரைக்கும் அனைத்துலுமே கலப்படம் என்பது இருந்து வருகிறது. பயன்படுத்தும் பொருள்களில் ஏதாவது கலப்படம் செய்திருந்தால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு சில நேரங்களில் ஆபத்தில்  கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. உதாரணமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்களில் ஏதேனும் கலப்படம் இருந்தால் அவை திடீரென்று வெடித்து அங்கு இருக்கும் உயிருக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து விடுகிறது. 


மேலும் ஒரு சில பொருள்களில் ஏதேனும் கலப்படம் இருந்தாலும் கூட அதனை கண்டறிந்து மாற்றிக் கொள்வதற்கு நிறைய வழிகளும் இருந்து வருகிறது. ஆனால் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து அதனை விற்பனை செய்கின்றனர். இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை பற்றி தெரியாமல் மக்களும் நம்பி வாங்கி அதனை அன்றாட வாழ்வில் உட்கொள்கின்றனர். தொடர்ந்து இதுபோன்று  பொருட்களை நாம் உட்கொள்வதினால் பல வகையான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் தொடங்கி காய்கறி, பழங்கள் என அனைத்துமே தற்பொழுது கலப்படம் என்பது இருந்து வருகிறது. காய்கறி மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்காக சில வகையான கெமிக்கல் பயன்படுத்தி அதனை பழுக்க வைத்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். 

மேலும் மசால் பொருள்களில் ருசிக்காக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வகையில் இருக்கும் பொருட்களையும் மறைமுகமாக சேர்த்து விற்பனை செய்யும் பல செயல்கள் தற்பொழுது நடந்து கொண்டு தான் உள்ளது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் இவ்வாறு கலப்படம் செய்வது அறிந்து அவர்களை கண்டிக்கும் விதமாக பல நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட அன்றாட வாழ்வில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களிலுமே எந்த விதத்திலாவது கலப்படம் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் இருந்து தான் வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்..

பழங்களை முதலில் பழுக்க வைப்பதற்காக பல வகையான கெமிக்கல்களை பயன்படுத்தி வந்தனர். பொதுவாக பழம் மற்றும் காய்கறிகளை நாம் வாங்கும் பொழுது அதன் வெளித்தோற்றத்தை பிரஷ்ஷாக உள்ளது என்று நினைத்து வாங்கிவிடும் பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே இந்த மனநிலையை கருத்தில் கொண்டு தற்பொழுது காய்கறி மற்றும் பழங்களுக்கு செயற்கை வண்ணங்களை பூசி விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை நாம் கேட்டிருப்போம். அதேபோல தற்பொழுது ஒருவர் ஆப்பிள் பழத்திற்கு சிவப்பு நிறத்தில் செயற்கை வண்ணம் அடித்து மிகவும் பிரஷ்ஷாக ஆப்பிள் இருப்பது போலவும், உண்மையான வண்ணம் போல பழத்தின் மீது பெயிண்ட் அடித்து அதனை அடுக்கி வைக்கின்றார். 

இவ்வாறு இவர் செய்யும் செயல் தற்பொழுது வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மெதுவாக ஒரு ஆப்பிள் தினந்தோறும் எடுத்துக் கொண்டாலே மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் கூறுவார்கள் ஆனால் இந்த ஆப்பிளை உட்கொண்டால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று வீடியோவை பார்க்கும் அனைவரும் கூறி வருகின்றனர். என்னை தொடர்ந்து இது உண்மையாகவே ஆப்பிள் தானா என்று விசாரிக்கும் பொழுது இது பிளாஸ்டிக்கில்  விளையாடுவதற்காக ஆப்பிள் போல செய்து இதன் மீது பெயிண்ட் அடுத்து உண்மையான ஆப்பிள் போல செய்வது தற்போது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது உண்மையான ஆப்பிள் இல்லை வெறும் பொம்மைதான் என்று பலரும் கூறி வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.