24 special

பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் என்ன பேசினார் தெரியுமா!

Thirumavalavan
Thirumavalavan

பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன் பாஜக அடுத்து என்ன செய்ய போகிறது என நீண்ட பட்டியலே போட்டார் அவர் பட்டியல் போட்டதை பார்த்த பலர் திருமாவளவன் உண்மையில் பாஜகவிற்கு எதிராக நம்மை எச்சரிக்கை செய்கிறாரா இல்லை பாஜகவின் பலம் என்ன என புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக பாஜகவிற்கு உதவுகிறாரா என பெரும் விவாதமே எழுந்து இருக்கிறது.சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். 



பின்னர் நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் சங்பரிவார் கொட்டம் தலை விரித்தாடுகிறது. பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அண்மையில் மாநிலங்களைவில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்து விவாதத்திற்கு உட்படுத்தினார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் வெள்ளிக்கிழமை 2 மணிக்கு மேல் தனிநபர் மசோதா தாக்கல் செய்யலாம். 

அரசாங்கம் மசோதாவை தயார் செய்யும், அனைவரின் மசோதாவும்  எடுத்து கொள்ளப்படுமா என்றால் எடுத்து கொள்ள படாது. இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டு முறை தான் தனி நபர் மசோதா சட்டமாகி இருக்கிறது. மற்றவை சட்டமாக்கபடுவதில்லை. 

ஆட்சியாளர்கள் விரும்பினால் ஒரு நாள் மசோதாவை கொண்டு வருவார்கள். பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் உறுப்பினர் 2020ல் தாக்கல் செய்த மசோதா அண்மையில் விவாதத்திற்கு வந்தது. பொது சிவில் சட்டம் மாநிலங்களைவில் நடந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்பரிவார் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் அதிகம் இருந்தாலும் ஒரே செயல்திட்டம். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்ககூடிய குழு புதிய அரசியலமைப்பு சட்டத்தை 32 பக்கத்தை முன்னோட்ட அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். 2024ல் மீண்டும் மோடி பிரதமரானால் அமல்படுத்த போகும் அரசியலமைப்பு சட்டம் இது தான். இவர்கள் இலக்கு ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டம் தான். 

அவர்களின் இலக்கு இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக அறிவிக்க வேண்டும், இந்து ராஷ்டிரா என அறிவிக்க வேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக சிலவற்றை செய்ய வேண்டும்.பாபர் மசூதி இடிப்பது, ஜம்மு காஷ்மீரில் 370 சட்ட பிரிவை நீக்குவது, பொதுசிவில் சட்டம், அண்டை நாடுகளில் இருந்து வந்தால் குடியுரிமை பறிப்பு. அகதிகளில் இஸ்லாமியர்கள் இருந்தால் குடியுரிமை தருவதில்லை. இறுதி இலக்கு அரச மதமாக இந்து மதம் இருக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம். 

ஒவ்வொரு கனவு திட்டங்களை நிறைவேற்றி படிப்படியாக வருகிறார்கள். எஞ்சி இருப்பது பொது சிவில் சட்டம், இதையும் நிறுவி விட்டால் அரசியலமைப்பு சட்டம் நீர்த்து போகும் என்று பேசினார். உண்மையில் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் பொதுசிவில் சட்டம் என்று கூறி திருமா நம்மை எச்சரிக்கை கொடுப்பதை காட்டிலும் பாஜக செய்துவிடும் நீர்த்து போகும் என பேசி பேசியே ஒரு வித பதற்றத்தை உண்டாக்கி விட்டார் என புலம்பி வருகின்றனர் பாஜக எதிர்ப்பாளர்கள்.