24 special

தேர்தல் ஆணையம் அதிரடி..! விழிபிதுங்கும் அரசியல் கட்சிகள்...!


புதுதில்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ராஜிவ் குமார் வந்த நாள் முதலே தனது அதிரடியை காண்பிக்க துவங்கியுள்ளார். அவரின் முதல் ஆக்சனில் எதிர்க்கட்சிகள் திணறிப்போயின. ராஜிவ் குமார் சட்ட அமைச்சகத்திடம் முதலில் கேட்டுக்கொண்டது ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க சொல்லி. 


டிசம்பர் 2021ல் ராஜிவ் குமாரின் கோரிக்கை ராஜ்யசபா குரல்வாக்கெடுப்பு மூலம் தேர்தல் திருத்த மசோதாவாக கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போதே இது சாத்தியப்படாது என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. போதிய விவாதங்கள் இல்லாமல் அவசரம் அவசரமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் பொங்கி எழுந்தன.

இந்நிலையில் மேலும் பல கோரிக்கைகளையும் சில அறிவுறுத்தல்களையும் இந்திய தேர்தல் ஆணையம் சட்டத்துறை அமைச்சகத்திடம் நேற்று வழங்கியுள்ளது. இதுகுறித்து வந்த செய்திகளின் படி ஒரு நபர் இரண்டு இடங்களில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளது தேர்தல் ஆணையம். மேலும் 20000 ரூபாய்க்கு மேல் நன்கொடை வாங்கினால் மட்டுமே 24ஏ விண்ணப்பத்தின்படி பதிவு செய்யவேண்டும்.

இந்த தொகையை 2000 ஆக குறைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் மாற்றம் வேண்டும் எனவும் அதேபோல அரசியல் கட்சிகளின் பதிவுகளை அல்லது அங்கீகாரங்களை நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்படவேண்டும் எனவும் சட்ட அமைச்சத்திற்கு கோரிக்கை எழுப்பியுள்ளது. மேலும் முத்தாய்ப்பாக  தேர்தல் கருத்துக்கணிப்புகளை தடைசெய்யும் பரிந்துரைகளையும் ஆணையம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் " தேர்தல் ஆணையம் ஆறு முக்கிய பரிந்துரைகளை மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி இனி ஒருவர் ஒரு இடத்திலேயே போட்டியிட வேண்டும் . வாக்காளர்களை புதிதாக இணைப்பதற்கு நான்கு தகுதி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்" என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.