24 special

அண்ணாமலையை கொண்டாடும் கன்னடர்கள் ...! அதிரடி திருப்பம்

Annamalai
Annamalai

அண்ணாமலையை கொண்டாடும் கன்னடர்கள் ...! அதிரடி திருப்பம்


கர்நாடகாவில் அரசியல் கள நிலவரம், அங்கு நடந்தது,அண்ணாமலை குறித்து கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜா சோழனிடம் தெரிவித்த கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் கன்னடர்கள்தான் அண்ணாமலையை கொண்டாடுகிறார்கள் என கூறி இருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது இது குறித்து சுந்தர்ராஜா சோழன் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு :

கர்நாடக நண்பர் ஒருவர்.மிகச்சிறந்த அரசியல் திறனாய்வாளர் அவர்.ஜாதி,சமூகம்,வளர்ச்சி என எல்லா தளத்திலும் விரிவாக நடுநிலைமையோடு பேசக்கூடிய நபர்..

இந்த தேர்தல் பரப்புரைகள்,மோடியின் பேரணி மற்றும் உரைகள் என எல்லாவற்றையும் களத்தில் இருந்து பார்த்துள்ளார்.தேர்தலான இன்று பல தொகுதி பூத்துகளுக்கு சென்று வந்த பிறகு மாலை என்னை அழைத்து சில தகவல்களை பதிவு செய்திருந்தார்..

மோடியின் பேரணியின் போது,'இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்றும்,எனக்கு இந்த அரசியல்லாம் தேவையே இல்லை என்றும் எண்ண ஓட்டம் உடைய மக்கள் கூட்டம் மோடிக்காக 4 மணி நேரம் காத்திருந்தது பற்றி சொன்னார்.

அதில் 20 வயதுக்கு குறைவான ஒரு பெண் மயக்கம் வந்து தடுமாறிய பிறகும் அவள் வீட்டுக்கு போக மறுத்ததையும்,மோடி வந்த பிறகு அந்தப் பெண் சன்னதம் கொண்டதைப் போல கொண்டாடி வரவேற்றதையும் அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதே அதிர்ச்சியை தன் குரல் வழியே அப்படியே என்னிடம் கடத்தினார்..

வயதானவர்களும்,நடுத்தர வயது உள்ளவர்களும் ஒரு 'கருணாமூர்த்தி வருகிறான்,தர்மதேவன் வருகிறான்' என்பது போல வரவேற்றார்கள்..ஒரு கட்சி ஊழியனைப் போல பூக்களை வாரிப் பொழிந்தார்கள் என்றும் சொன்னார்..

மோடியினுடைய வீச்சு,அவருடைய மகிமை இளைஞர்களிடம் குறிப்பாக 16 வயதிலிருக்கும் மாணவ,மாணவிகளிடமே கூட சென்றுவிட்டது என்பது எதிர்காலம் என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாகவும் குறிப்பிட்டார்..2024 தேர்தல் வெற்றி மோடியை மையப்படுத்தியது என்கிற போது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதை விட அவர் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார்.அது இன்னும் பேரதிர்ச்சி..

மோடி - யோகி மீது வருகிற மரியாதைக்குரிய நாயக பிம்பம் அண்ணாமலை மீதும் கர்நாடக மக்களுக்கு வருவதாக சொன்னார்.நான் இடைமறித்து ஆமாம் அவர் அங்கே பணி செய்துள்ளார்.மொழி சிறுபான்மையினர்கள் அதிகம் இருக்கிற மாநிலம்தானே அதனால் அண்ணாமலைக்கு ஈர்ப்பிருப்பதில் லாஜிக் உள்ளது என்றேன்..

ஆனால் அதை மறுத்த அவர்,அண்ணாமலையை உயர்த்திப் பிடிப்பது கன்னட மக்கள்.இன்னொரு மொழிக்காரனை அதுவும் இன்றைய நிலையில் ஒரு தமிழனை அவர்கள் சொந்த மகனைப் போல பார்ப்பது அதிசயம்.இது நடக்கவே வாய்ப்பில்லாத ஒன்று என்கிறார்.

நான் மோடிக்காக வாக்களித்தேன்,நான் இந்துத்துவாவுக்காக வாக்களித்தேன்" என்று சொல்கிற கன்னட இளைஞர்களை போலவே "நான் அண்ணாமலைக்காக வாக்களித்தேன்" என்ற கன்னட இளைஞர்களையும் பார்க்கிற போது எனக்கு எதுவுமே புரியவில்லை என்றார்..

அவர் இதையெல்லாம் சொல்லிவிட்டு,என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே, நான் என் மூளையை ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு,நான் கண்டவற்றின் உணர்தலில் இருந்து என் மனதால் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்வாயா என்றார்..கேளுங்கள் என்றேன்..

ஒருவேளை இங்கே பாஜக ஒரு மெஜாரிட்டி அரசை அமைத்தால் அண்ணாமலையை முதல்வராக நியமிக்க வாய்ப்புள்ளதா என்றார்..என்ன திடீர்னு பிரதமராகிறார் மு.க.ஸ்டாலின் மாதிரி ஆரம்பித்துவிட்டீர்கள் என்றேன்..

இல்லை,என் மூளைக்கு தெரிகிறது இது சாத்தியமில்லை என,ஆனால் அண்ணாமலைக்கு இங்கே கிடைக்கும் வரவேற்பு கற்பனைக்கு அப்பால் உள்ளது..நான் கன்னட லோக்கல் சேனல்களைத்தான் பெரும்பங்கு பார்க்கிறேன்.அது அவருக்கு தரும் முக்கியத்துவமும்,அவர் பேசாத மேடைகளில் மக்களே அவர் பேச வேண்டும் என்று கோஷிப்பதை எல்லாம் பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது என்றார்..

அப்போது நான் ஒன்றை யோசித்துப் பார்த்தேன்.கர்நாடக மக்களிடம் ஒரு அடிப்படை பண்பு உள்ளது.ஒரு அதிகாரி நேர்மையானவனாக இருந்தால் அவனை தூக்கி கொண்டாடுகிறார்கள்.அரசை எதிர்த்து கூட மக்களுக்கு நல்லதை அதிகாரிகளால் அங்கே செய்ய முடிகிறது..

அதிகாரிகளுக்கான மரியாதை இருக்கும் நிலமாக கர்நாடகம் உள்ளது.இதைப் போல தமிழகத்தில் பொது ஏற்பை பார்க்க முடிவதில்லை.

ஒரு நேர்மையாளனை எப்படி சிறுமை செய்யலாம்,அவனை காயப்படுத்தி எப்படி புறமுதுகிட வைக்கலாம் என்ற குரூர சிந்தனையை மக்களுக்குள் திராவிடம் விதைத்துவிட்டதாகவே உணர்கிறேன்.

நீ ரொம்ப யோக்கியம்" என்ற புள்ளிக்குள் எந்த நேர்மையாளனையும் கொண்டு வந்து நிறுத்த, இங்கே ஒவ்வொருவரும் வேட்டைக்காரனாக உலவுகிறோம்..

இந்த நிலை கர்நாடகாவில் இல்லை,அங்கே ஊழலற்ற அதே சமயம் கருணை கொண்ட ஒரு அதிகாரியை மக்கள் தெய்வத்திற்கு நிகராக கொண்டு போகத் தயங்கவில்லை,அவனை தலைவனாக ஏற்கவும் தயாராக உள்ளார்கள் என்பது புரிகிறது..

இதையே அந்த நண்பரிடமும் பகிர்ந்து கொண்டேன்..எதிர்காலத்தில் தேசிய களத்தில் தென்னிந்திய நட்சத்திர முகமாக அண்ணாமலை உயர்வார்.இது 2024 லேயே மோடிக்கு பயன்பாடாக இருக்கும் என்பதையும் சொன்னேன்..

முழு மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.அது நடந்துவிட்டால் பாஜகவின் தென்னிந்திய குஜராத் இனி கர்நாடகா என்பது மறுக்க முடியாத உண்மை என குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கன்னடர்கள், மத்தியில் பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது ஆச்சர்யத்தை அளித்து இருக்கிறது.