24 special

பிரதமருக்கு தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்துவர் எழுதிய கடிதம்...! சிக்க போவது யார்?

Modi
Modi

சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பம் ஒன்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை ஒன்றை வைக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர், அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் நிச்சயம் தமிழகத்தில் சிலரின் முக திரையை கிழிக்கும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து TNNEWS24 க்கு ஈமெயில் மூலம் கடிதம் அனுப்பியவர்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


நான் எனது மனைவி இரண்டு குழந்தைகள் என தூத்துக்குடி பகுதியில் எங்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தோம் எங்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள், வாரம் வாரம் தவறாமல் சர்ச் சென்று குடும்பத்துடன் விசுவாச நிகழ்வுகளில் கலந்து கொள்வோம் இப்படி இருக்கையில் எனது மூத்த மகள் 9-ம் வகுப்பு படிக்கும் சூழலில் சரியாக படிப்பு வரவில்லை.

இது குறித்து எங்களை பள்ளி நிர்வாகம் அழைத்து கூறியது எனவே மகளின் கல்வியை மேம்படுத்த டியூசன் அனுப்பலாம் எனும் போது, எதார்த்தமாக  யூடுப் ஒன்றில் விஸ்வாசம் சபை செய்யும் போதகர் ஒருவர் ஆண்டவர் கொடுத்த இயற்கை முறை மூலம் ஒரே வாரத்தில் சிறப்பு ஜெபம் செய்கிறேன் என வெறும் தலையில் கைவைத்து ஜெபம் செய்தார்.

உன் மகள் அடுத்த வருடம் 10-ம் வகுப்பு பொது தேர்தலில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெறுவார் என கூறி காணிக்கையை பெற்று கொண்டு அனுப்பினார், அதன் பிறகு எனது மகள் படிப்பில் தேர்ச்சி பெற்று விடுவாள் என நாங்கள் நம்பி இருந்தோம் ஆனால் முடிவு மாற்றி நடந்தது, எனது மகள் கணித தேர்வில் வெற்றி பெறவில்லை இதனால் பெருத்த வேதனையில் இருந்தோம்.

அப்போது எங்கள் சர்ச் பாதர் சில அறிவுரை வழங்கினார் தமிழகத்தில் இயேசுவை நம்பி மக்களை ஏமாற்ற ஒரு கூட்டமே இருக்கிறது வாரம் இறுதியில் கேலி கிண்டல் ஆள் செட்டப் என ஒரு கூட்டமே கிறிஸ்தவர்களை ஏமாற்றி பணம் சம்பாரிக்கிறது அவர்களிடம் தெளிவாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதற்கு இடையில் எனது குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து மகளை மற்றொரு பள்ளியில் சேர்த்து விட்டேன் அவளும் முன்பு இருந்ததை காட்டிலும் நன்றாக படிக்கிறாள்.

சென்னை வந்த பின்பு இது போன்ற பள்ளி குழந்தைகள், கண் தெரியாதவர்கள், வாய் பேசாதவர்கள் வேலை கிடைக்காதவர்கள் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பலரையும் திடீர் விஸ்வாச கூட்டம் என ஒரு சில பேர் மொத்தமாக ஏமாற்றி வருவது தெரியவந்ததது, நானும் பலரை நேரடியாக தொலைபேசியில் பேசி கேள்வி எழுப்பி இருக்கிறேன்.

ஆனால் அவர்கள் என்னை தற்போது கிறிஸ்தவன் இல்லை என்கிறார்கள், நான் இன்று வரை சென்னையில் புகழ் பெற்ற சர்ச் நிர்வாகித்தில் உறுப்பினராக இருக்கிறேன், என்னுடைய கோரிக்கை ஒன்றுதான் அனைத்து மதங்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள், ஆனால் சொந்த சமுதாய மக்களை கண் தெரியவைப்பேன், கையை வைத்தே வயிற்றில் உள்ள கட்டியை நீக்குவேன் என இப்படி யாரும் செய்வதில்லை.

இவர்களை போன்றவர்கள் தமிழகத்தில் 5 மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க கர்த்தருக்கு சேவை செய்வதாக நினைத்து உங்களுக்கு இந்த கடிதத்தை ஆங்கிலம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் எழுதியுள்ளேன் எனவே நடவடிக்கை எடுத்து அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

(பின்குறிப்பு பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சகம், சிறுபான்மை அமைச்சகம் ஆகியவற்றிற்கு அனுப்பிய கடிதம், ஈமெயில் போன்ற ஆதாரங்களையும் TNNEWS24- க்கு அனுப்பி இருக்கிறார். எனவே அதன் அடிப்படையில் இந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறோம்.  தனி மனித பாதுகாப்பு கருதி பெயரை இங்கு குறிப்பிடவில்லை )